ஆப்நகரம்

Dagaalty: டகால்டி குறித்து அறிவிப்பு வெளியிட்ட சந்தானம்!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டகால்டி படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Sep 2019, 9:53 pm
சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் டகால்டி. விஜய் ஆனந்த் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ரித்திகா சென், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். மும்பையில் செட்டிலான தமிழ் பையனைப் பற்றிய படம்தான் டகால்டி. ஆக்‌ஷன் காமெடி கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil santhanam


இந்த நிலையில், சந்தானம் தனது ட்விட்டரில் டகால்டி படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார். விஜய் நரேன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை, மும்பை, புனே, ஆந்திரப்பிரதேசம், அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தில்லுக்கு துட்டு 2, ஏ1 ஆகிய படங்களில் நடித்து வெளியிட்டுள்ளார். இதில், தில்லுக்கு துட்டு படத்திற்கு ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு கிடைத்தது. ஆனால், இப்படத்துடன் ஒப்பிடுகையில் ஏ1 படம் ரசிகர்களிடையே போதுமான விமர்சனம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படங்கள் தாமதமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்