ஆப்நகரம்

முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில்!

ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

Samayam Tamil 7 Jan 2021, 11:20 am
நடிகர் செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை ராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவர் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணிபுரிந்தார்.
Samayam Tamil Senthil


பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

விஜய் எந்த நேரத்துல முடிஞ்சா தொடச் சொல்றா பார்ப்போம்னு சொன்னாரோ...
இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில்.

நடிகர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போதும் அவர்களது காமெடியை ரசிப்பவர்கள் ஏராளம் உள்ளனர். நடிகர் கவுண்டமணி கூட சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். ஆனால் செந்தில் இதுவரை ஹீரோவாக நடித்ததில்லை.

'பத்து தல' படத்தில் அசுரன் பட பிரபலம்!
இந்நிலையில், செந்தில் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடிக்க உள்ளார். மேலும் இதில் செந்திலுக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்