ஆப்நகரம்

கலைஞருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி: தமிழ் திரையுலகினர் பங்கேற்பு!

சென்னையில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

Samayam Tamil 13 Aug 2018, 9:07 pm
சென்னையில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
Samayam Tamil suriya


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி சென்னையில் காலமானார். இதையடுத்து, பல போராட்டங்களுக்கு பிறகு கருணாநிதியின் உடல் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், தொண்டர்கள் என்று பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தும் திரையுலகம்

இந்த நிலையில், தமிழ்த் திரையுலகினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதையடுத்து, இன்று சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. காமராஜர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவ படத்திற்கு திரையுலகினர் பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், ராதாரவி, பொன்வண்ணன், வாசு, ரஜினிகாந்த், விஷால், பாக்கியராஜ், ரேவதி, சுஹாசினி, விஜயகுமார், கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்