ஆப்நகரம்

நயன்தாரா மீது தெலுங்கு பட அதிபர் சங்கத்தில் புகார்?

நடிகர் வெங்கடேஷ் நயன்தாரா இடையேயான மோதல் தொடர்பாக நயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

TNN 29 Jul 2016, 4:06 pm
சென்னை: நடிகர் வெங்கடேஷ் நயன்தாரா இடையேயான மோதல் தொடர்பாக நயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil complaint against nayantara about the clash with venkatesh
நயன்தாரா மீது தெலுங்கு பட அதிபர் சங்கத்தில் புகார்?


தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக ‘பாபு பங்காராம்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாராவுக்கும் வெங்கடேசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

படத்தில் நயன்தாராவும் வெங்கடேஷும் தோன்றும் ஒரு பாடல் மட்டும் பாக்கி முடிக்கப்படாமல் இருக்கிறது. அந்த பாடலில் நடிப்பதற்காக நயன்தாராவை படக்குழுவினர் அழைத்துள்ளனர். ஆனால் ஏற்கனவே உள்ள கால்ஷீட்டுகளை விரயம் செய்து விட்டதாக கூறி, அந்த பாடலில் நடிக்க மறுத்துள்ளார் நயன்தாரா.

நயன்தாராவின் பிடிவாதத்தால், வேறு வழியின்றி அந்த பாடல் இல்லாமலேயே படத்தை வெளியிட முடிவுசெய்துள்ளனர்.

ஐதராபாத்தில் நடந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவிலும் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. இதனால், நயன்தாரா மீது வெங்கடேசும் படக்குழுவினரும் அதிருப்தியில் உள்ளனர். அவர் மீது தெலுங்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் புகார் அளிப்பது பற்றியும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்