ஆப்நகரம்

நடிகைக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் எஸ்.எம்.எஸ் அனுப்பிய வாலிபர் மீது போலீசில் புகார்!

நடிகை தீப்தி காப்சிக்கு, வாலிபர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் வகையில் எஸ்.எம்.எஸ். அனுப்பியதற்காக அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Feb 2018, 5:34 pm
நடிகை தீப்தி காப்சிக்கு, வாலிபர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் வகையில் எஸ்.எம்.எஸ். அனுப்பியதற்காக அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil complaint against the fan who sent sms to shocking actress
நடிகைக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் எஸ்.எம்.எஸ் அனுப்பிய வாலிபர் மீது போலீசில் புகார்!


கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தீப்தி காப்சி. இவர் ‘ஹனி ஹனி இப்பானி’, ‘ஜூவலம்தம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. இந்த குறுந்தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அனுப்பியவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அவருக்கு வந்த குறுந்தகவலில், விபசார தொழிலுக்கு அழகான பெண்கள் இருந்தால் தனக்கு தெரியப்படுத்தவும் என்று வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை தீப்தி காப்சி, இந்த செய்தியை எனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன். உங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றால் உங்கள் வீட்டு பெண்களை அணுகுங்கள். உங்கள் பணம் மிச்சமாகும் என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த மர்ம நபர் மீது நடிகை தீப்தி காப்சி க்ரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்