ஆப்நகரம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட டிவி நடிகர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிதி

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சின்னத்திரை நடிகர்கள், நடிகைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

Samayam Tamil 14 Apr 2020, 12:29 pm
கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
Samayam Tamil udhayanidhi stalin


ஊரடங்கு உத்தரவால் டிவி சீரியல் மற்றும் படங்களின் ஷூட்டிங் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். அன்றாடம் உழைத்தால் தான் சாப்பாடு என்று இருப்பவர்களுக்கு பிரபல நடிகர்கள் பலர் நிதியுதவி அளிப்பதுடன் அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றை கொடுத்து உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சின்னத்திரை நடிகர்கள், நடிகைகளுக்கு நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்த தொகையை அவர் சின்னத்திரை நடிகர் சங்கத்திடம் அளித்தார்.

தக்க சமயத்தில் உதவி செய்த உதய்ணா வாழ்க என்று அவரின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் சமூக வலைதளத்தில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களோ உதயநிதி நினைத்தால் இதை விட அதிகம் கொடுக்க முடியுமே என்று விமர்சித்துள்ளனர்.

அதை பார்த்த ரசிகர்களோ, உதவி செய்வதை பாராட்டவிட்டாலும் பரவாயில்லை, விமர்சிக்காமல் இருக்கலாமே என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா விஸ்வரூபம்: மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் நடிகர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்