ஆப்நகரம்

காஜலின் திருமண திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்ட கொரோனா

கொரோனா வைரஸ் பிரச்சனையால் திருமணம் செய்து கொள்ளும் இடத்தை மாற்றியுள்ளாராம் காஜல் அகர்வால்.

Samayam Tamil 13 Oct 2020, 6:31 pm
காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது என்று செய்திகள் வெளியாகின. அதை காஜல் அகர்வால் கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து காஜல் விரைவில் கவுதமை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பேச்சு கிளம்பியது.
Samayam Tamil kajal aggarwal


30ம் தேதி எனக்கும், கவுதமுக்கும் கல்யாணம், ஆனால்...: காஜல் அகர்வால்

இதை பார்த்த காஜலோ, அக்டோபர் மாதம் 30ம் தேதி எனக்கும், கவுதம் கிட்ச்லுவுக்கும் மும்பையில் திருமணம் நடக்கும் என்று ட்வீட் செய்தார். மகாராஷ்டிராவில் எங்காவது டெஸ்டினேஷன் வெட்டிங் நடத்தலாம் அல்லது ஸ்டார் ஹோட்டலில் நடத்தலாம் என்று காஜல் அகர்வால் திட்டமிட்டாராம். ஆனால் கொரோனா வைரஸ் அவர் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.

எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால் திருமணம் நடக்கும் இடத்தை மாற்றிவிட்டாராம் காஜல். அதாவது மும்பை மரைன் டிரைவ் பகுதியில் இருக்கும் காஜலின் வீட்டில் தான் திருமணம் நடக்கப் போகிறதாம்.

இந்த திருமணத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு இல்லையாம். இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரும் மட்டுமே கலந்து கொள்ளப் போகிறார்களாம். திருமணத்திற்கு கூட்டம் சேர்த்து கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வேண்டாம் என்று முன்னெச்சரிக்கையாக இப்படி ஒரு நடவடிக்கையாம்.

இது காஜல் மற்றும் அவரின் வருங்கால கணவர் கவுதம் சேர்ந்து எடுத்த முடிவாம். காஜலும், கவுதமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலை வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கி திருமணம் வரை வந்திருக்கிறார்கள்.

காஜல் என்ன தான் படங்களில் பிசியாக இருந்தாலும் நேரம் கிடைத்தபோது எல்லாம் கவுதமை பார்க்க சென்றுவிடுவாராம். இருவரும் ஜோடியாக துபாய் மற்றும் மாலத்தீவுகளுக்கு சென்று வந்தார்களாம். காஜல் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

காஜலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தான் காஜல் விரைவில் திருமதி ஆகப் போகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்