ஆப்நகரம்

Ajith : அஜித் வந்தாலே படப்பிடிப்பு தளம் மகிழ்ச்சியாகும்!: பூர்ணிமா!

படப்பிடிப்புக்கு அஜித் சார் வந்தாலே அங்கு பணியாற்றுபவர்களின் முகத்தில் அதிக சந்தோஷத்தைக் காணலாம் என்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா.

Samayam Tamil 8 May 2019, 3:12 pm
நடிகர் அஜித் கோலிவுட் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார். ‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து தற்போது ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் உருவாகும் ‘நேர் கொண்ட பார்வை’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil poornima


இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிவர் பூர்ணிமா. அண்மையில் வடிவமைப்பாளர் பூர்ணா, டிவி சானல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘‘நான் பல படங்களில் பணியாற்றியுள்ளேன்.

ஆனால், நான் பணியாற்றிய நடிகர்களிலேயே அஜித் சார் மிகவும் எளிமையான நடிகராக இருக்கிறார். எல்லோரிடமும் மிகவும் பணிவாகவும், அன்பாகவும் பழகுகிறார். பிளாட் பார டீக்கடையில் தான் டீ குடிக்கிறார். அவர் வந்தாலே படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்