ஆப்நகரம்

அமலா பாலை இரவு உணவுக்கு அழைத்த தொழிலதிபர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகார் மனுவை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 16 Jun 2022, 5:45 pm
'சிந்து சமவெளி' படம் தொடங்கி 'ஆடை' படம் வரையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகை அமலா பால். திரைப்பட வாய்ப்புகள் இல்லையென்றாலும், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.
Samayam Tamil Amala Paul
Amala Paul


தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அமலா பால், டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகும் கூட தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெறவிருந்த'டாஸ்லின் தமிழச்சி' என்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தார் அமலா பால். இதற்காக சென்னை தி.நகரில் ஸ்ரீதர் நடத்தி வரும் 'மான்ஜான்ஸ்' டான்ஸ் பயிற்சி அகடாமியில் பயிற்சி எடுத்தார். அப்போது, அழகேசன் என்பவர் அமலாபாலிடம், மலேசியா செல்லும்போது இப்ராகிம் என்பவருடன் இரவு உணவு அருந்த வேண்டும் என்று பேசியுள்ளார்.

இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமலாபால் கொடுத்த புகாரின் அடிப்படையில், தி.நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் ஸ்ரீதர், அழகேசன், பாஸ்கரன், இப்ராகிம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Dhanush: அந்த பொண்ணு மட்டும் வேண்டவே வேண்டாம்.. பிடிவாதமாய் மறுக்கும் தனுஷ்.!

undefinedஇந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன், ,ஸ்ரீதரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த வழக்கில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால், குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். எனவே, வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்த்து.

இந்த நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
undefined

அடுத்த செய்தி

டிரெண்டிங்