ஆப்நகரம்

STR : சிம்பு செய்தது தவறு - ரூ. 85 லட்சம் நீதிமன்றத்தில் கட்ட உத்தரவு

சிலம்பரசன் ‘அரசன்’ என்ற படத்தில் நடிப்பதற்காக முன்பணம் வாங்கி, படத்தில் நடித்து கொடுக்க தவறியதாக வழக்கு தொடரப்பட்டதில், அவர் ரூ. 85 லட்சம் நீதிமன்றத்தில் உத்தரவாத தொகையை கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Sep 2018, 5:41 pm
சிலம்பரசன் ‘அரசன்’ என்ற படத்தில் நடிப்பதற்காக முன்பணம் வாங்கி, படத்தில் நடித்து கொடுக்க தவறியதாக வழக்கு தொடரப்பட்டதில், அவர் ரூ. 85 லட்சம் நீதிமன்றத்தில் உத்தரவாத தொகையை கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Simbu


சிம்பு படத்தளத்திற்கு தாமதமாக வருகின்றார், சொன்ன தேதிகளில் படங்களில் நடித்து கொடுப்பதில்லை என்ற பல்வேறு புகார்கள் உள்ளன. இந்நிலையில் அவர் படம் நடிக்க முன் பணம் வாங்கி, படத்தில் நடித்துக் கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

ஃபேஷன் மூவி சார்பில் ‘அரசன்’ என்ற பெயரில் படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஹீரோவாக சிம்புவை முடிவு செய்து அவருக்கு ரூ. 1கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. அதில் பாதி தொகையான ரூ. 50 லட்சத்தை முன் பணமாக வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்த படத்தில் நடிக்காமல், அவர் ஒதுக்கிய தேதிகளில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். அதனால் நாங்கள் கொடுத்த பணத்தை முழுவதுமாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் ஃபேஷன் மூவி நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிம்புவுக்கு நோட்டீஸ் :
இந்நிலையில் 4 வாரங்களில் ரூ. 85 லட்சத்தை நீதிமன்றத்தில் உத்தரவாத தொகையை கட்ட வேண்டும். தவறினால், சிம்பு வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்ப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்