ஆப்நகரம்

தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்ச்சையாக போட்டியிடவுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

Samayam Tamil 29 Jan 2019, 2:56 pm
தமிழ் சினிமாவில் வில்லனாகவும், ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவரது பூர்வீகம் கர்நாடகம். இவர் தமிழை அடுத்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.
Samayam Tamil prakash-raj


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் ராஜின் தோழியும், பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு, தீவிரமான அரசியல் கருத்துக்களை பேச ஆரம்பித்தார். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் வருகிற பார்லிமென்ட் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்தார். பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கு சென்று அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கட்சி சார்பற்ற அமைப்புகள், சங்கங்கள், இளைஞர் அமைப்புகளை சந்தித்து பேசி வருகிறார். தேர்தலில் தன்னை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்