தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கதைக்களத்தில் படம் எடுத்து அசத்தியவர் இயக்குனர் CS அமுதன். 2010 ஆம் ஆண்டு சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்ப்படம் தமிழ் சினிமாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. ஹாலிவுட் திரையுலகில் ஸ்பூப் என்ற கதைக்களத்தில் அதிகளவில் படங்கள் வெளிவரும். அந்த கதைக்களத்தை நம் இந்திய சினிமாவிற்கு தமிழ் படம் மூலம் எடுத்துவந்தார் CS அமுதன்.
மெகாஹிட்டான படங்களின் காட்சிகளை கோர்வையாக்கி அதன் மூலம் ஒரு கதையை நகைச்சுவை கலந்து எடுப்பதே இந்த ஸ்பூப் கதைக்களம். அதன் படி தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற படங்களின் காட்சியை வைத்து அதை மறுஉருவாக்கம் செய்து ரசிகர்களை மகிழவைத்தார் CS அமுதன்.
அதன் பின் இவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது படம் வெளிவராத நிலையில் 2018 ஆம் ஆண்டு தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார். 2018 ஆண்டு வெளியான தமிழ்ப்படம் 2 மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது விஜய் ஆன்டனி நடிப்பில் ரத்தம் படத்தை இயக்கிவருகிறார்.
BOFTA தனஞ்ஜயன் மற்றும் கமல் போஹ்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தன் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட கதைக்களத்தில் CS அமுதன் உருவாக்கிவரும் ரத்தம் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
மேலும் படத்தை பற்ற பேசிய இயக்குனர் இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உருவாக்கியுள்ளோம், இம்முயற்சி தமிழ் சினிமாவிற்கே புதுமையாக இருக்கும் என்பதில் என்ற மாற்றுக்கருத்தும் இல்லை என தெரிவித்தார். ரத்தம் தெறிக்க ஒரு ஆக்க்ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் ரத்தம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கேட்டே இப்படத்தை தயாரித்ததாக தனஞ்ஜயன் கூறியுள்ளார்.
அந்த அளவிற்கு இந்த கிளைமாக்ஸ் காட்சி முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவும் அதேசமயத்தில் ரசிகர்கள் ரசிக்கும்படியும் இருக்கும் என்றார். மேலும் ரத்தம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெகாஹிட்டான படங்களின் காட்சிகளை கோர்வையாக்கி அதன் மூலம் ஒரு கதையை நகைச்சுவை கலந்து எடுப்பதே இந்த ஸ்பூப் கதைக்களம். அதன் படி தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற படங்களின் காட்சியை வைத்து அதை மறுஉருவாக்கம் செய்து ரசிகர்களை மகிழவைத்தார் CS அமுதன்.
அதன் பின் இவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது படம் வெளிவராத நிலையில் 2018 ஆம் ஆண்டு தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார். 2018 ஆண்டு வெளியான தமிழ்ப்படம் 2 மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது விஜய் ஆன்டனி நடிப்பில் ரத்தம் படத்தை இயக்கிவருகிறார்.
BOFTA தனஞ்ஜயன் மற்றும் கமல் போஹ்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தன் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட கதைக்களத்தில் CS அமுதன் உருவாக்கிவரும் ரத்தம் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
மேலும் படத்தை பற்ற பேசிய இயக்குனர் இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உருவாக்கியுள்ளோம், இம்முயற்சி தமிழ் சினிமாவிற்கே புதுமையாக இருக்கும் என்பதில் என்ற மாற்றுக்கருத்தும் இல்லை என தெரிவித்தார். ரத்தம் தெறிக்க ஒரு ஆக்க்ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் ரத்தம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கேட்டே இப்படத்தை தயாரித்ததாக தனஞ்ஜயன் கூறியுள்ளார்.
அந்த அளவிற்கு இந்த கிளைமாக்ஸ் காட்சி முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவும் அதேசமயத்தில் ரசிகர்கள் ரசிக்கும்படியும் இருக்கும் என்றார். மேலும் ரத்தம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.