ஆப்நகரம்

இது நம்ம வலிமைய காட்ற நேரமில்ல: தமிழ்ப்படம் இயக்குனரின் ட்விட்

கொரோனா வைரஸ் பற்றி இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதிவிட்டுள்ள ட்விட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Samayam Tamil 17 Mar 2020, 3:42 pm
தமிழ் சினிமாவில் வந்த அனைத்து படங்களில் இருந்தும் காட்சிகளை எடுத்து அதை விமர்சிக்கும் வகையில் 'தமிழ்ப்படம்' என்ற படத்தை இயக்கியவர் சி.எஸ்.அமுதன். அதன் பிறகு அவர் அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கினார்.
Samayam Tamil CS Amudhan


இவர் எப்போதும் ட்விட்டரில் நக்கலாக பல்வேறு விஷயங்களை பதிவிடுவது வழக்கம். தற்போது அவர் கொரோனா வைரஸ் பற்றி ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

"இது நம்ம வலிமைய காட்ற நேரமில்ல. இப்ப இல்லனா எப்பவும் இல்லன்றத உனரனும். நம்ம ஆபீஸ்ல, பொயி வேல இருந்தா பாருங்கடானு சொன்னாலும் அதயெல்லாம் பொருட்படுத்தாம நம்மள சார்ந்தோறுக்கு மத்தவங்க இரங்கல் தெரிவிக்கிற நிலம வந்துடாம இருக்க, வீட்லயே கொஞ்சம் சில் பன்னு மாப்பி!" என ட்விட் செய்துள்ளார் சிஎஸ். அமுதன்.


இந்த ட்விட்டில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் பேசியதில் இருந்து குறிப்புகள் உள்ளது.

வலிமை - அஜித்

இப்ப இல்லனா எப்பவும் இல்ல - ரஜினி

வேல இருந்தா பாருங்கடா - விஜய் சேதுபதி

சார்ந்தோருக்கு இரங்கல் - கமல்

சில் பன்னு மாப்பி - விஜய்

இந்த ஐந்து நடிகர்கள் பேசிய விஷயங்களை வைத்து தான் அமுதன் இப்படி ஒரு ட்விட் போட்டுள்ளார். மக்கள் யாரும் வெளியில் போக வேண்டாம் வீட்டிலேயே இருங்கள் என அட்வைஸ் கொடுக்கவே இவ்வளவும் செய்துள்ளார் அவர்.

இந்த ட்விட்டை பார்த்துவிட்டு சிலர் சிஎஸ் அமுதன் தற்போது ஹர்பஜன் சிங் போல பேசுவதாக கிண்டல் செய்துள்ளனர்.



மேலும் சில வாரங்கள் முன்பு ரசிகர் ஒருவர் "தமிழ்ப்படம் 3" வருமா என கேள்வி கேட்டதற்கு . 2022ல் வர வாய்ப்பிருக்கிறது என பதில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்