பட யூனிட்டையே தன் கைக்குள் வைத்திருந்தார் இயக்குனர் அதிரூபன் என்று நடிகை சிருஷ்டி டாங்கே கூறியுள்ளார்.
சாந்தனுவும் & சிருஷ்டி டாங்கே இணைந்து நடித்த படம் ‘முப்பரிமாணம்’. இந்தப் படத்தை இயக்குனர் அதிரூபன் இயக்கியுள்ளார். படம் மார்ச் 3ம் தேதி வெளியாகிறது.சமீபத்தில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை சிருஷ்டி டாங்கே பட இயக்குனர் அதிரூபன் பற்றி பேசினார்.
படப்பிடிப்பின் போது காலையில் வந்தவுடன் இயக்குனருக்கு வணககம் தெரிவிக்க வேண்டும். பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்லுவார். சாப்பிட்டுவிட்டு சீக்கிரம் ரெடியாகிவிட்டு வாங்க என்று சிரிக்காமல் கூறுவார். மேலும் யூனிட்டில் போன் பேசக்கூடாது என்ற கண்டிஷன் போட்டிருந்தார். இதனால் படப்பிடிப்பின் போது யாரிடமும் சந்தோஷம் இல்லை.
நான் ஹீரோ சாந்தனுவிடம் பேசிக் கொண்டிருந்தால் உடனே வந்து என்ன பேசுகிறீர்கள் என்பார். நாங்களும் சீனைப் பற்றித்தான் பேசுகிறோம் என்போம். அம்மாகிட்ட போனில் பேசுவதைக்கூட என்ன பேசுகிறார் என்று உற்று கவனித்துக் கொண்டிருப்பார். இப்படிதான் படப்பிடிப்பு நடக்கிற ஒவ்வொரு நாளும் இருந்தார்.
நான் சொல்வது எல்லாமே உண்மை. ஆனாலும், படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான் டைரக்டர் அப்படி எங்களின் கவனத்தை அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட விடவில்லை என்பதை புரிந்து கொண்டோம்’’ என்றார் சிருஷ்டி டாங்கே.இப்படி இயக்குனர் அதிரூபன் பற்றி மறைமுகமாக பேசி, கடைசியில் அவர் தலையில் ஒரு ஐஸ் கட்டியை வைத்து தப்பித்துக் கொண்டார் நடிகை சிருஷ்டி டாங்கே.
daanke say abouy director athirupan
சாந்தனுவும் & சிருஷ்டி டாங்கே இணைந்து நடித்த படம் ‘முப்பரிமாணம்’. இந்தப் படத்தை இயக்குனர் அதிரூபன் இயக்கியுள்ளார். படம் மார்ச் 3ம் தேதி வெளியாகிறது.சமீபத்தில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை சிருஷ்டி டாங்கே பட இயக்குனர் அதிரூபன் பற்றி பேசினார்.
படப்பிடிப்பின் போது காலையில் வந்தவுடன் இயக்குனருக்கு வணககம் தெரிவிக்க வேண்டும். பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்லுவார். சாப்பிட்டுவிட்டு சீக்கிரம் ரெடியாகிவிட்டு வாங்க என்று சிரிக்காமல் கூறுவார். மேலும் யூனிட்டில் போன் பேசக்கூடாது என்ற கண்டிஷன் போட்டிருந்தார். இதனால் படப்பிடிப்பின் போது யாரிடமும் சந்தோஷம் இல்லை.
நான் ஹீரோ சாந்தனுவிடம் பேசிக் கொண்டிருந்தால் உடனே வந்து என்ன பேசுகிறீர்கள் என்பார். நாங்களும் சீனைப் பற்றித்தான் பேசுகிறோம் என்போம். அம்மாகிட்ட போனில் பேசுவதைக்கூட என்ன பேசுகிறார் என்று உற்று கவனித்துக் கொண்டிருப்பார். இப்படிதான் படப்பிடிப்பு நடக்கிற ஒவ்வொரு நாளும் இருந்தார்.
நான் சொல்வது எல்லாமே உண்மை. ஆனாலும், படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான் டைரக்டர் அப்படி எங்களின் கவனத்தை அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட விடவில்லை என்பதை புரிந்து கொண்டோம்’’ என்றார் சிருஷ்டி டாங்கே.இப்படி இயக்குனர் அதிரூபன் பற்றி மறைமுகமாக பேசி, கடைசியில் அவர் தலையில் ஒரு ஐஸ் கட்டியை வைத்து தப்பித்துக் கொண்டார் நடிகை சிருஷ்டி டாங்கே.
daanke say abouy director athirupan