ஆப்நகரம்

விஜய்க்கு நடனம் சொல்லித் தர ஆசைப்பட்டு ஏமாந்து போன நடிகை!

கடந்த 2004ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வந்த கில்லி படத்தில் விஜய்க்கு டான்ஸ் சொல்லித்தரும் ஆசையில் வந்த நடிகை சுஜாதாவிற்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ளது.

Samayam Tamil 18 Jun 2019, 11:13 am
ஈசன் படத்தில் வரும் வந்தானம்மா வந்தானம்மா எல்லோருக்கும் வந்தானம் என்ற பாடலின் மூலம் மிகவும் புகழ்பெற்றவர் நடிகை சுஜாதா. கோடம்பாக்கத்தில் இருந்து வந்துள்ள இவர், சிறு வயது முதலே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், நடனப் பள்ளியில் சேர்ந்து ஏராளமான பரிசுகளை பெற்றார். சினிமா துறைக்கு பேர் போன கோடம்பாக்கத்தில் இருந்து வந்த இவர், சினிமாவில் குரூப் டான்ஸராக சேர்ந்து ஆடத் தொடங்கினார். முதலில் டான்ஸ் மாஸ்டர் ரகு குரூப்பில் இணைந்து நடனம் ஆடினார்.
Samayam Tamil Sujatha


பின்னர் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் குரூப்பில் இணைந்து ரஜினிகாந்த் நடிப்பில் வந்த தளபதி படத்தில் வரும் ராக்கம்மா கைய தட்டு, காட்டுக்குயிலு ஆகிய பாடல்களுக்கு குரூப் டான்ஸராக நடனம் ஆடியுள்ளார். மேலும், ரகு மற்றும் சுந்தரம் மாஸ்டர் ஆகியோரிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

திண்டுக்கல்லில் பரபரப்பு: சினிமா கலைஞர் தூக்கிட்டு தற்கொலை!


இந்த நிலையில், தான் கதிர் இயக்கத்தில் வந்த காதல் தேசம் என்ற படத்தில் வரும் முஸ்தஃபா முஸ்தஃபா என்ற பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்ததன் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆகியுள்ளார். இதையடுத்து, பகைவன், நேசம் உள்பட 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேங்கஸ்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிம்பு!

இதற்கிடையில், அண்மையில், இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தளபதி விஜய்யின் கில்லி படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, இயக்குனர் தரணி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது, முதல் முறையாக விஜய்க்கு நடனம் சொல்லித் தர வேண்டும் என்பதற்காகத் தான் கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தேன்.

ஆனால், அங்கு சென்ற பிறகு தான் எனக்கு தெரிந்தது. அந்தப் படத்தில் த்ரிஷாவிற்கு அம்மாவாக நடிக்கத் தான் என்னை கூப்பிட்டு இருக்கிறார்கள் என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது. இதையடுத்து, தரணியிடம் கேட்டேன். நான் உதவி இயக்குனராக இருந்த போதே உங்களது வொர்க் மற்றும் ஆர்வத்தை கவனித்து வருகிறேன்.

Sri Reddy: கீர்த்தி சுரேஷ் நோயாளியாகிவிட்டார், சாய் பல்லவி எப்படி தெரியுமா?- ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு

அதனால், இந்தப் படத்தில் உங்களது ஒர்க்கை பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக, ராஜூ சுந்தரம் மற்றும் விஜய்யின் கெமிஸ்டரி நன்றாகவே இருந்ததால், அதனை மாற்ற முடியவில்லை. அதனால், நீங்கள் முதலில் இந்த ரோலில் நடிங்க என்று கூறினார். சரி, எனக்கு பிடிச்ச ஹீரோ என்று நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்