சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பாலிவுட் முன்னணி நடிகர் ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.
ஆமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'டங்கல்' திரைப்படம் வரும் வெள்ளியன்று ஹிந்தி மட்டுமல்லாது தமிழ்,தெலுங்கு உட்பட பல பிராந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டங்கல் திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் ஆமீர்கான் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு டங்கல் படத்தை திரையிட்டுக் காட்டிய ஆமீர்கான்,அவரிடம் பாராட்டுகளை பெற்றார்.மேலும் டங்கல் படத்தின் தமிழ் படத்திற்கு ரஜினிகாந்த் பிண்ணனி குரல் அளிக்க வேண்டும் எனவும் ஆமிர்கான் கேட்டுக் கொண்டார்.இதற்கு சூப்பர் ஸ்டாரும் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற டங்கல் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஆமீர்கான் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை.அப்படி ஒரு சூழல் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டும் என எனக்கும் ஆசைதான்.ஆனால் தெலுங்கு மொழியை கற்றுக் கொள்வது எனக்கு சற்று கடினமாக இருக்கும்
தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆகியோரோடு நடிக்க விருப்பம் இருக்கிறது.என்னுடைய படத்தில் அவர்களுக்கு ஏற்ற வகையில் கதாபாத்திரம் அமைந்தால்,கண்டிப்பாக அவர்களோடு இணைந்து நடிப்பேன்.”என தெரிவித்துள்ளார்.
Aamir Khan spoke about his wish to work with the Tamil superstar Rajinikanth.
ஆமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'டங்கல்' திரைப்படம் வரும் வெள்ளியன்று ஹிந்தி மட்டுமல்லாது தமிழ்,தெலுங்கு உட்பட பல பிராந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டங்கல் திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் ஆமீர்கான் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு டங்கல் படத்தை திரையிட்டுக் காட்டிய ஆமீர்கான்,அவரிடம் பாராட்டுகளை பெற்றார்.மேலும் டங்கல் படத்தின் தமிழ் படத்திற்கு ரஜினிகாந்த் பிண்ணனி குரல் அளிக்க வேண்டும் எனவும் ஆமிர்கான் கேட்டுக் கொண்டார்.இதற்கு சூப்பர் ஸ்டாரும் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற டங்கல் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஆமீர்கான் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை.அப்படி ஒரு சூழல் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டும் என எனக்கும் ஆசைதான்.ஆனால் தெலுங்கு மொழியை கற்றுக் கொள்வது எனக்கு சற்று கடினமாக இருக்கும்
தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆகியோரோடு நடிக்க விருப்பம் இருக்கிறது.என்னுடைய படத்தில் அவர்களுக்கு ஏற்ற வகையில் கதாபாத்திரம் அமைந்தால்,கண்டிப்பாக அவர்களோடு இணைந்து நடிப்பேன்.”என தெரிவித்துள்ளார்.
Aamir Khan spoke about his wish to work with the Tamil superstar Rajinikanth.