ஆப்நகரம்

பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகைக்கு, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

‘தங்கல்’ படத்தில் நடித்த பிரபல நடிகை சாயிரா வாசிம் சார்பில் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Samayam Tamil 27 Aug 2018, 5:57 pm
‘தங்கல்’ படத்தில் நடித்த பிரபல நடிகை சாயிரா வாசிம் சார்பில் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
Samayam Tamil zaira wasim


நடிகை சாயிஷா வாசிம் ‘தங்கல்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தை அமீர்கான் தயாரித்துள்ளார். மேலும் அவர் சாயிஷா வாசிமுக்கு தந்தையாக நடித்துள்ளார். இந்தப் படம் பெண்களுக்கான குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவானது. இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக மூவாயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில் நடிகை சாயிஷா வாசிம், கடந்த 8 மாதங்களுக்குப் முன்பு டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்தார். அப்போது சக பயணி ஒருவர் இவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது நடிகை வாசிம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்