ஆப்நகரம்

தலைவர் ரசிகர்கள் வெறித்தனம்: தர்பார் வெற்றியடைய அலகு குத்தி ரசிகர்கள் வேண்டுதல்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படம் வெற்றியடைய வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மன் சோறு சப்பிட்டும், கண்ணத்தில் அலகு குத்தியும் ரசிகர்கள் வேண்டுதல்

Samayam Tamil 8 Jan 2020, 5:05 pm
மதுரை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெற்றியடைய வேண்டி ரஜினி ரசிகர்கள் அலகு குத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Samayam Tamil தர்பார் ரசிகர்கள்
தர்பார் ரசிகர்கள்


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. அதில் இடம்பெற்றிருந்த ‘ஒரிஜினாலாவே நான் வில்லன்மா’ உள்ளிட்ட வசனங்கள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

ஆசையாய் எதிர்பார்த்து ஏமாந்து போன ரஜினி ரசிகர்கள்

தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி (நாளை) ரிலீஸாகவுள்ளது. படம் வெளியாவதையொட்டி வழக்கம் போல் உற்சாகமான கொண்டாட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.


அந்த வகையில், சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படம் வெற்றியடைய வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மன் சோறு சப்பிட்டும், கண்ணத்தில் அலகு குத்தியும் ரசிகர்கள் வேண்டுதலில் ஈடுபட்டது நெகிழ்ச்சியடைய செய்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்