ஆப்நகரம்

ஓணம் ஸ்பெஷலாக இன்று வெளியாகும் தர்பார் செகண்ட் லுக்: பயத்தில் ரஜினி ரசிகர்கள்

தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

Samayam Tamil 11 Sep 2019, 3:15 pm
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தர்பார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களை அசர வைத்தது. அந்த போஸ்டரை பார்த்தே கதை இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று பலரும் பேசினார்கள்.
Samayam Tamil darbar


இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி இன்று மாலை 6 மணிக்கு தர்பார் செகண்ட் லுக் வெளியிடப்படும் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த நல்ல நாளில் சர்பிரைஸுக்கு தயாராகுங்கள் என்று கூறி தர்பார் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. இந்த அறிவிப்பை பார்த்த ரஜினி ரசிகர்கள் செம குஷியாகிவிட்டனர்.

உடனே 6 மணி வரக் கூடாதா, இதற்காக மாலை வரை காத்திருக்க வேண்டுமா என்று ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. கதை குறித்து அவ்வப்போது ஏதாவது தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் முருகதாஸ் இது எதையுமே உறுதி செய்யவில்லை.

நான் பேச மாட்டேன், படம் பேசும் என்று முருகதாஸ் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார். தர்பார் செகண்ட் லுக்கை லைகா வெளியிடும் முன்பு கருப்பு ஆடு யாராவது ஆன்லைனில் கசியவிட்டுவிடக் கூடாது என்று ரஜினி ரசிகர்களுக்கு கவலை இல்லாமல் இல்லை.

தர்பார் பட வேலைகள் துவங்கியதில் இருந்தே புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்