ஆப்நகரம்

மீ டூ புகார் இயக்குனரின் படத்திற்கு கடும் எதிப்பு! - ஐய்யோ ரகுல் பிரீத் சிங் பாவம்!

ராகுல் ப்ரீத் சிங் நடித்த படத்திற்கு பொதுமக்களிடம் இருந்து பல எதிர்ப்பு எழுந்துள்ளது.

Samayam Tamil 5 Apr 2019, 7:16 pm
நடிகை ராகுல் ப்ரீத் சிங், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தற்போது இவர் ‘தேவ்’ படத்தை அடுத்து தமிழில் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘தி தி பியார் தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil ajay-dev-rakul


இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது நடிகை ராகுல் ப்ரீத் சிங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் ராகுல் ப்ரீத் சிங்கால் இந்தப் படத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் இதே படத்தில் குணசித்திர நடிகர் அலோக் நாத் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் மீது நடிகை வின்டா நந்தா மீடூ இயக்கம் சார்பாக புகார் கூறினார். தன்னை பாலியல் ரீதியாக அலோக்நாத் துன்புறுத்தியதாக வின்டா நந்தா தெரிவித்திருந்தார். இதையடுத்து அப்படத்தை வெளியிடக்கூடாது என்று இணையத்தில் பலர் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்