ஆப்நகரம்

சிக்கலில் கவுதம் மேனனின் 'குயின்': 11ம் தேதிக்குள் பதில் அளிக்க ஹைகோர்ட் உத்தரவு

குயின் வெப் தொடரை வெளியிட தடை விதிக்கக் கோரி ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு இயக்குநர் கவுதம் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 9 Dec 2019, 4:22 pm
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்கிற பெயரில் ஏ.எல். விஜய் படமாகவும், குயின் என்கிற பெயரில் கவுதம் மேனன் வெப் தொடராகவும் எடுத்து வருகிறார்கள். குயின் தொடரின் டீஸர், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
Samayam Tamil queen


வெப் தொடர் வரும் சனிக்கிழமை வெளியாக உள்ளது. இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான தீபா தன் அத்தை பற்றி தன் அனுமதி இல்லாமல் படம், வெப் தொடர் என்று எதையும் தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தன் வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த படைப்புகள் எடுக்கப்படுகின்றதா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தீபா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. குயின் தொடர் சனிக்கிழமை வெளியாகப் போவதாக கூறப்படுகிறது. அதனால் அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தீபா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தர்பார் விழாவில் அப்படி நான் என்ன தப்பா பேசினேன்?: ராகவா லாரன்ஸ்

கவுதம் மேனன் தரப்போ, தீபா தொடர்ந்த வழக்கு தொடர்பான எந்த ஆவணமும் தங்களிடம் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆவணங்களை கவுதம் மேனன் தரப்புக்கு அளிக்க தீபாவுக்கு உத்தரவிட்டார். மேலும் குயின் தொடர்பாக வரும் 11ம் தேதிவிளக்கம் அளிக்குமாறு கவுதம் மேனன் தரப்புக்கு உத்தரவிட்டார்.

கமல் சொன்னதை ரஜினி ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டாரோ?

அடுத்த செய்தி

டிரெண்டிங்