ஆப்நகரம்

திருமணத்திற்கு ஒரு கோடிக்கு நகை வாங்கிய தீபிகா படுகோனே!

திருமணத்துக்காக நடிகை தீபிகா படுகோனே, 1 கோடி ரூபாய்க்கு நகைகள் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 10 Nov 2018, 12:41 pm
திருமணத்துக்காக நடிகை தீபிகா படுகோனே, 1 கோடி ரூபாய்க்கு நகைகள்வாங்கியதாகதகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil deepikath


பாலிவுட் திரைபட நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து இப்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற14 மற்றும் 15ம் தேதிகளில் இத்தாலியில்நடக்கிறது.இதற்காக அங்குள்ளலேக் கோமா பகுதியில் 18ஆம் நூற்றாண்டை சேர்ந்தமாளிகையை வாடைக்குஎடுத்துள்ளனர்.

இயற்கை எழில் சுழுந்த பகுதியில் இந்தமாளிகை உள்ளது.உறவினர்களையும் நண்பர்களையும் மும்பையில் இருந்துஅழைத்து செல்ல சிறப்புவிமானத்துக்கும்ஏற்பாடு செய்துள்ளனர். இத்தாலியில் அவர்கள் தங்குவதற்கும்அறைகள்ஒதுக்கப்பட்டு உள்ளன.திருமணத்துக்காக தீபிகா படுகோனே ரூ.1 கோடிக்குநகைகள்வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை அந்தேரியில் உள்ளபிரபல நகைக்கடையில் வைரம் மற்றும் தங்க நகைகளை வாங்கி இருக்கிறார். பத்மாவத்படத்தில் அணிந்தஇருந்ததை போன்று பெரிய நகைகளை அவர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரன்வீர் சிங் அணிவதற்குதங்க சங்கிலியும் வாங்கி உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்