ஆப்நகரம்

முக்கியமான நபருக்கு ரூ.40 கோடி மதிப்பில் வீடு பரிசளித்த தீபிகா படுகோன்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சுமார் ரூ.40 கோடி மதிப்பில் மிக முக்கியமான ஒருவருக்கு வீடு ஒன்றை பரிசளித்துள்ளார்.

TNN 13 Nov 2016, 2:19 pm
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சுமார் ரூ.40 கோடி மதிப்பில் மிக முக்கியமான ஒருவருக்கு வீடு ஒன்றை பரிசளித்துள்ளார்.
Samayam Tamil deepika padukone gifts a whopping rs 40 crore flat to her special man
முக்கியமான நபருக்கு ரூ.40 கோடி மதிப்பில் வீடு பரிசளித்த தீபிகா படுகோன்


கடந்த 2010ஆம் ஆண்டு தெற்கு மும்பை அருகே பிரபாவதி பகுதியில் சுமார் ரூ.16 கோடி மதிப்பில் 4 பெட்ரூம் வசதிக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தீபிகா சொந்தமாக வாங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு பெருந்தொகையில் புதிய வீடு ஒன்றை வாங்கி, தனக்கு மிகவும் முக்கியமான ஒரு நபருக்கு பரிசாக அளித்துள்ளார்.

தீபிகா படுகோன் குடியிருக்கும் அதே குடியிருப்பின் 30வது மாடியில் 3001எண் கொண்ட வீட்டை ரூ.40கோடிக்கு வாங்கி தனது தந்தை பிரகாஷ் படுகோனுக்கு பரிசளித்துள்ளார். இங்கு தீபிகா 26வது மாடியில் குடியிருக்கிறார்.

பிரகாஷ் படுகோனுக்கும் அவரது மனைவிக்கும், தீபிகா வசிக்கும் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் வடிவமைப்பு மிகவும் பிடித்துபோனதாலும், பெற்றோர்களை பக்கமாகவே வைத்துக்கொள்ள எண்ணியும் தீபிகா இந்த பரிசை வழங்கியுள்ளார்.

தற்போது மாஜித் மாஜிதி இயக்கத்தில் பெயரிடப்படாத திரைபப்டத்தில் நடித்து வரும் தீபிகா படுகோன், சஞ்சய் லீலா பன்ஷாலி இயக்கும் 'பத்மாவதி' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் தீபிகா நடித்துள்ள 'XXX:ரிட்டர்ன் ஆஃப் சாண்டர் கேஜ்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்