ஆப்நகரம்

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் வெளியீடு..!!

பாலிவுட் நட்சத்திரங்கள், தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Samayam Tamil 15 Nov 2018, 11:26 pm
இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் இத்தாலியின் லேக் கோமா நகரில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil 766fb372-8bdf-4cf9-b1b4-f1edca866010.


பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த அக்டோபர் 21ம் தேதி ரன்வீர் சிங்கை, திருமணம் செய்யப்போவதாக, திருமண அழைப்பதிழுடன் ட்விட்டரில் அறிவித்தார் தீபிகா.
View this post on Instagram ❤️ A post shared by Deepika Padukone (@deepikapadukone) on Nov 15, 2018 at 6:36am PST

இந்நிலையில், இத்தாலியின் உள்ள பிரபல லேக் கோமா நகரில் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் எளிமையாக நேற்று நடந்து முடிந்தது. நடிகை தீபிகா படுகோன் குடும்பத்தினரின் கொங்கனி பிரமாண பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
View this post on Instagram ❤️ A post shared by Deepika Padukone (@deepikapadukone) on Nov 15, 2018 at 6:36am PST

தென்னிந்திய கலாச்சார முறைப்படி காலை 7 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் தீபிகா கழுத்தில் ரன்வீர் தாலி கட்டினார். இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். தீபிகா-ரன்வீர் திருமணத்தில் மொத்தம் 40 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து, இரண்டாவது நாளாக வட இந்திய முறைப்படி தீபிகா-ரன்வீர் திருமணம் இன்று நடைபெறுகிறது. இதில் ரன்வீர் சிங் சார்ந்துள்ள குடும்பத்தாரின் பாரம்பரிய வழக்கங்கள் இடம்பெறும். மேலும், இரவில் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இத்தாலியில் திருமணம் முடிந்து 2 நாட்கள் கழித்து இந்தியா திரும்பும் ரன்வீர்-தீபிகா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவ.21ம் தேதி பெங்களூரிலும், நவ.28ம் தேதி மும்பையிலும் நடைபெறுகிறது. இதற்கு திரையுலக, விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரன்வீர்-தீபிகா திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கசியக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனால் இவர்களது திருமண நிகழ்வை புகைப்படத்தில் கூட காண முடியவில்லை என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்