ஆப்நகரம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து புறப்பட்ட தீபிகா - ரன்வீர் ஜோடி!

மும்பை: புதிதாக திருமணம் செய்து கொண்ட தீபிகா - ரன்வீரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Samayam Tamil 20 Nov 2018, 12:10 pm
பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா, ரன்வீர் நவம்பர் 14ஆம் தேதி இத்தாலியின் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர். அதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
Samayam Tamil Ranveer


இதையடுத்து இருவரும் மும்பை திரும்பினர். இவர்களை வரவேற்க ஏராளமான ஊடகங்களும், ரசிகர்களும் விமான நிலையத்தில் காத்திருந்தனர். பின்னர் ரன்வீரின் இல்லத்திற்கு சென்று, அங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் நவம்பர் 21ஆம் தேதி தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூருவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இருவரும் இன்று காலை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்தனர்.

அங்கு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து விட்டு, விமானத்தில் புறப்பட்டனர். இதன்பிறகு வரும் நவம்பர் 28ஆம் தேதி, மும்பை கிராண்ட் ஹூயாட் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதில் ஏராளமான திரைப் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். மும்பை வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் வரவேற்பு நிகழ்ச்சியின் பங்கேற்று, எங்கள் மகன் ரன்வீர் மற்றும் தீபிகாவின் திருமணத்தைக் கொண்டாடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்