ஆப்நகரம்

இஸ்லாமியர்களுக்கு பாதிப்புனா குரல் கொடுப்பேன்னு சொன்ன ரஜினி எங்கே?

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று பேட்டி அளித்த ரஜினிகாந்த் எங்கே என்று சில அரசியல் கட்சியினரும், சமூக வலைதளவாசிகளும் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர்.

Samayam Tamil 26 Feb 2020, 12:32 pm
இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று பேட்டி அளித்த ரஜினிகாந்த் எங்கே என்று சில அரசியல் கட்சியினரும், சமூக வலைதளவாசிகளும் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர்.
Samayam Tamil delhi violence claims 20 lives where is rajinikanth
இஸ்லாமியர்களுக்கு பாதிப்புனா குரல் கொடுப்பேன்னு சொன்ன ரஜினி எங்கே?


டெல்லி வன்முறை

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. அங்கு சிஏஏவுக்கு ஆதாரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். இஸ்லாமியர்களை அடையாளம் காண அவர்களின் உடையை எல்லாம் கழற்றுமாறு கூறுகிறார்கள். இந்நிலையில் தான் இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னவரை எங்கே காணவில்லை என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரஜினி எங்கே?

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன் என்று தெரிவித்த வருங்கால அரசியல்வாதி ரஜினி எங்கே, டெல்லி பற்றி எரிகிறது, போர் வந்துவிட்டது வாங்க என்று சில அரசியல் கட்சியினரும், சமூக வலைதளவாசிகளும் தெரிவித்துள்ளனர். சிலரோ, டெல்லி விஷயம் ரஜினிக்கு தெரிந்திருக்காது, அப்படியே தெரிந்தாலும் அவரால் வர முடியாது. அண்ணாத்த படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் என்று கிண்டலாக தெரிவித்துள்ளனர்.

எப்படி முடியும்?

ஏப்ரல் மாதம் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் ரஜினி நாடே பேசிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் குறித்து கருத்து தெரிவிக்கக் கூட தயங்குகிறார். இவரால் எப்படி தலைவராக தன்னிச்சையாக பேச முடியும், முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்க்கும் ரஜினி ரசிகர்களோ, சட்டத்தால் பாதிப்பு என்றால் தான் குரல் கொடுப்பேன் என்றாரே தவிர கலவரம் செய்பவர்களுக்கு அல்ல என்று கூறுகிறார்கள்.

ரசிகர்கள் நம்பிக்கை

அட ஏன்பா ரஜினியிடம் போய் எதற்கெடுத்தாலும் கருத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்க விரும்புகிறார் போன்று. இப்போ அவர் கருத்து தெரிவித்து தான் என்ன ஆகப் போகிறது. ஒன்னும் இல்லை. அதற்கு அவர் அண்ணாத்த பட வேலையை மட்டும் கவனித்தாலே போதும் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு எல்லாம் ரஜினி தனது செயலால் பதிலடி கொடுப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்