நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கப்போவது தேசிங்கு பெரியசாமிதான் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பிரபல இயக்குநரான தேசிங்கு பெரியசாமி, தனது அடுத்தப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் தனது அடுத்த படம் ரஜினியுடன் இல்லை என தெரிவித்துள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியான போதே அதனை பார்த்து பாராட்டினார் நடிகர் ரஜினிகாந்த்.
மேலும் தனக்கும் இதுபோன்ற ஒரு கதையை தயார் செய்யுமாறு கூறினார் ரஜினிகாந்த். இதனை வைத்தே ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமிதான் இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தேசிங்கு பெரிய சாமியின் அடுத்த படம் ரஜினியுடன் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.