ஆப்நகரம்

அன்புச்செழியன் நைஸ் மேன் – நடிகை தேவயானி கருத்து.!

தமிழ் சினிமாவின் கந்து வட்டி கொடூரனாக கருதப்படும் அன்புச்செழியனுக்கு, ஆதரவாக நடிகை தேவயானி கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 25 Nov 2017, 1:50 pm
தமிழ் சினிமாவின் கந்து வட்டி கொடூரனாக கருதப்படும் அன்புச்செழியனுக்கு, ஆதரவாக நடிகை தேவயானி கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil devayaani supports anbuseliyan
அன்புச்செழியன் நைஸ் மேன் – நடிகை தேவயானி கருத்து.!


நடிகரும் இயக்குனருமான சசிக்குமாரின் உறவினர் தயாரிப்பாளர் அசோக் குமார், அன்புச்செழியனின் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் பல சினிமா பிரபலங்களும் அன்புச் செழியனால் தாங்கள் மிரட்டப்படுவதை வெளிப்படையாக ஊடகங்களின் முன் தெரிவித்து வருகின்றனர்.

பல சினிமா பிரபலங்களும், அன்புச்செழியன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி வற்புறுத்திய வண்ணம் இருக்கின்றனர். ஆனால் இயக்குநர் சீனு ராம சாமி, சுந்தர் சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, உள்ளிட்டோர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்கைளைத் தொடர்ந்து நடிகை தேவயானியும் அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார். அன்புச்செழியன் நடிகை தேவயானிக்கு பைனான்ஸ் கொடுத்து அந்த பணத்தை வாங்க மிரட்டியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதனை மறுத்த நடிகை தேவயானி பைனான்சியர் அன்புச்செழியன் நைஸ் மேன் எனவும், ஜென்டில் மேன் எனவும் காதலுடன் படத்திற்காக பைனான்ஸ் வாங்கிய போது தன்னை அன்புச்செழியன் மிரட்டியதாக வெளியான தகவல் பொய் எனவும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்