ஆப்நகரம்

Dhanush, Aishwarya Rajinikanth: எங்களை தாண்டி தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து நடந்துடுமா?: சாதித்த '2 வி.ஐ.பி.க்கள்'

Dhanush, Aishwarya Rajinikanth Reunion: தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களின் விவாகரத்து முடிவை கைவிட 2 வி.ஐ.பி.க்களின் தொடர் முயற்சி தான் காரணம் என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 6 Oct 2022, 11:28 am
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்ய 2 வி.ஐ.பி.க்கள் தான் காரணமாம்.
Samayam Tamil dhanush aishwarya rajinikanth to be back again thanks to the two vips
Dhanush, Aishwarya Rajinikanth: எங்களை தாண்டி தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து நடந்துடுமா?: சாதித்த '2 வி.ஐ.பி.க்கள்'



தனுஷ்

தனுஷுக்கும், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் கடந்த 2004ம் ஆண்டு நவலம்பர் மாதம் 18ம் தேதி திருமணம் நடந்தது. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி மாதம் பிரிவு முடிவை அறிவித்தார்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும்.

ஐஸ்வர்யா

2 பிள்ளைகளை வைத்துக் கொண்டு தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவது ரஜினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்நிலையில் இரு வீட்டாரும் சந்தித்து பேசி நல்ல முடிவு எடுத்திருக்கிறார்களாம். தனுஷும், ஐஸ்வர்யாவும் விரைவில் சேரப் போகிறார்களாம். இந்த செய்தி அறிந்த தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடம்

எங்களுக்கு அப்பாவும், அம்மாவும் வேண்டும். இரண்டு பேருமே ஒரே வீட்டில் இருக்க வேண்டும். நாங்கள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே அடம்பிடித்து தாங்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள் வி.ஐ.பி.க்களான யாத்ராவும், லிங்காவும். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

வேண்டாம்

அப்பாவை பிரிந்து நாம் தாத்தா வீட்டில் இருக்க வேண்டாம் அம்மா. நாம் நம் வீட்டிற்கே சென்றுவிடலாம் என்று ஐஸ்வர்யாவிடம் அடிக்கடி கூறி வந்தாராம் மூத்த மகனான யாத்ரா. மகன்களுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று தான் ரஜினியும் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்