ஆப்நகரம்

Dhanush: மீண்டும் சேரும் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?: சந்தோஷத்தில் ரசிகர்கள்

Aishwarya Rajinikanth, Dhanush: தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டார்களா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு நல்ல செய்தி வெளியாகியிருக்கிறது.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 9 Apr 2023, 2:53 pm
Dhanush, Aishwarya Rajinikanth to reunite?: தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து வெளியாகியிருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
Samayam Tamil dhanush aishwarya rajinikanth to start lving together again
Dhanush: மீண்டும் சேரும் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?: சந்தோஷத்தில் ரசிகர்கள்


​தனுஷ்​

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். தாங்கள் பிரிவது குறித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்கள். மகன்கள் யாத்ரா, லிங்காவை அழைத்துக் கொண்டு போயஸ் கார்டனில் இருக்கும் அப்பா ரஜினியின் வீட்டிற்கு சென்றுவிட்டார் ஐஸ்வர்யா.

​விவாகரத்து​

தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டாலும் விவாகரத்து கோரி அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில் தான் விவாகரத்து கேட்டு தனுஷும், ஐஸ்ர்யாவும் சென்னை நீதிமன்றம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. விசாரித்துப் பார்த்ததில் அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.

​மகிழ்ச்சி​

Nayanthara: கொட்டும் மழையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உதவிய நயன்தாரா: வீடியோ இதோ

தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்து வாழும் ஐடியாவில் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடவுளே அந்த தகவல் வதந்தியாக இருக்கக் கூடாது, நிஜமாகிவிட வேண்டும் என தனுஷ், ஐஸ்வர்யா, ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.


​ரஜினி​

என்ன பிரச்சனையாக இருந்தாலும் விவாகரத்து ஒரு முடிவு இல்லை என்று நம்புபவர் ரஜினிகாந்த். ஐஸ்வர்யா தன் கணவரை பிரிந்து வந்தபோது, மகன்களுக்காக மீண்டும் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்தினார் ரஜினி. ஆனால் ஐஸ்வர்யாவும், தனுஷும் உடனே மனம் மாறுவதாக இல்லை. இந்நிலையில் தான் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

​பங்களா​

Dhanush: அதிரடி முடிவு எடுத்த தனுஷ்: அதுக்கு ஐஸ்வர்யா ஒத்துக்குவாரா?

தனுஷ் தற்போது போபஸ் கார்டனில் ரஜினியின் வீட்டிற்கு அருகில் தான் வசித்து வருகிறார். ரூ. 150 கோடி செலவில் பங்களா கட்டி அண்மையில் குடியேறினார். புதுமனை புகுவிழாவில் ரஜினி வீட்டில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. யாத்ரா, லிங்கா கூட வரவில்லை. ரஜினியின் அண்ணனின் 80வது பிறந்தநாள் விழாவை கொண்டாட அனைவரும் பெங்களூருக்கு சென்றதால் தனுஷ் வீட்டு விசேஷத்திற்கு வர முடியாமல் போய்விட்டதாம்.


​பேரன்கள்​

பேரன்கள் யாத்ரா, லிங்காவுடன் அதிக நேரம் செலவிட ஆசைப்பட்டு தான் போயஸ் கார்டனில் வீடு கட்டுமாறு தனுஷிடம் கூறினார் ரஜினிகாந்த். பூமி பூஜையில் தன் மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். ஆனால் பங்களாவை கட்டி முடிப்பதற்குள் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள். பிரிவுக்கு பிறகு தனுஷும் சரி, ஐஸ்வர்யாவும் சரி கெரியரில் படுபிசியாகிவிட்டார்கள். பல ஆண்டுகள் கழித்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.Dhanush: ஆசைப்பட்டது தனுஷ், கிடைச்சது செல்வராகவனுக்கு: காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்