ஆப்நகரம்

தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைய போகிறார்களா?: விவாகரத்தில் புது ட்விஸ்ட்!

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Samayam Tamil 21 Jan 2022, 7:27 pm
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil Dhanush - Aishwarya
Dhanush - Aishwarya


இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்திருந்தனர்.

இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. வழக்கமான குடும்ப தகராறுதான். அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.

குளியல் தொட்டி சோப்பு நுரைக்குள் ஆண்ட்ரியா: லைக்குகளை அள்ளும் புகைப்படம்!
மேலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மறுபடியும் இணைய வேண்டும் என்று திரையுலகை சார்ந்த பிரபலங்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூட இருவரும் இணைய வேண்டும் என தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரையும் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் விவாகரத்து அறிவிப்பு வெளியாகி 5 நாட்களாகியும் ஐஸ்வர்யாவின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷின் பெயர் அப்படியே இருக்கிறது.இதனால் தனுஷை பிரிய ஐஸ்வர்யா மனமில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் இணைய அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்