ஆப்நகரம்

பிறந்த நாளில் ரஜினியிடம் ஆசீர்வாதம் பெற்ற தனுஷ்!!

நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது மாமனாரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.

TOI Contributor 28 Jul 2016, 9:54 pm
நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது மாமனாரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். @dhanushkraja met @superstarrajini and got his blessings today!! pic.twitter.com/D76VHPFe0e— Nikkil (@onlynikil) July 28, 2016 ''துள்ளுவதோ இளமை'' படத்தில் அறிமுகமாகி இன்று திறமையான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தைத் தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
Samayam Tamil dhanush got blessings from father in law rajini on his birthday
பிறந்த நாளில் ரஜினியிடம் ஆசீர்வாதம் பெற்ற தனுஷ்!!


இந்த இரண்டு படங்களிலும் தனுஷ் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதைத் தொடர்ந்து திருடா திருடி, தேவதையைக் கண்டேன், வேலையில்லா பட்டதாரி, '3' ஆகிய படங்களின் மூலமாக தன்னை ஒரு திறமையான நடிகராக அடையாளப்படுத்திக் கொண்டார்.

ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். கடந்த 2011ல் '3 திரைப்படத்தில் இவர் பாடிய ''ஒய் திஸ் கொலவெறி டி'' ஏறக்குறைய உலகம் முழுவதும் புகழ் பெற்றது.

தற்போது ரஜினி நடிப்பில் வெளிவந்த ''கபாலி'' திரைப்படம் எந்தளவிற்கு பெயர் பெற்றதோ அதற்கு இணையாக, ''கொலவெறி'' பாட்டும் பெயர் பெற்று இருந்தது.

இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ரஜினியிடம் தனுஷ் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். 2004-ஆம் ஆண்டில் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்