ஆப்நகரம்

Dhanush attacks Vijay: வயசான அப்பா அம்மாவ பார்த்துக்குறதுதான் மாஸ்... விஜய்யை சாடிய தனுஷ்?

Dhanush attacks Vijay: நடிகர் தனுஷ் திடீரென பெற்றோர் குறித்து பேசிய பேச்சு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Aug 2022, 10:24 am
நடிகர் தனுஷ் திடீரென பெற்றோர் குறித்து பேசிய பேச்சு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil dhanush indirectly attacks actor vijay
Dhanush attacks Vijay: வயசான அப்பா அம்மாவ பார்த்துக்குறதுதான் மாஸ்... விஜய்யை சாடிய தனுஷ்?



நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய்க்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் விஜய்க்கு என பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

Chandramukhi 2: வடிவேலுவை வாயிலேயே குத்திய ராதிகா... வைரலாகும் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

அப்பாவுடன் விரிசல்

இந்நிலையில் நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவான எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சு அடிபட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் பலருமே விஜய்க்கும் எஸ்ஏசிக்கும் இடையில் நல் உறவு இல்லை என கூறி வருகின்றனர்.

80வது பிறந்தநாள்

சமீபத்தில் எஸ்ஏசி தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தனது மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டிய போட்டோக்கள் வெளியானது. இதேபோல் திருக்கடையூர் கோவிலில் மனைவியுடன் சேர்ந்து சதாபிஷேகம் செய்து கொண்ட போதும் அதில் விஜய்யோ அல்லது அவரது மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகள் என யாரும் கலந்து கொள்ளவில்லை.

Naga Chaitanya: அதைப்பத்தி மட்டும் பேசாதீங்க... இனிமே பேச ஒன்னுமில்ல... சமந்தா குறித்து பேசியதும் சீறிய நாக சைதன்யா!

சினிமாவில்தான் பாசம்?

இந்த சம்பவங்களை எல்லாம் பார்த்த நெட்டிசன்கள், சினிமாவில் மட்டும்தான் பெற்றோர் மீது பாசம் இருக்குமா? நிஜவாழ்க்கையில் பெற்றோரை தவிக்க விடுவது சரியா என சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்யை விளாசி வருகின்றனர். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சில் நடிகர் தனுஷ் பேசியிருப்பது விஜய்யை அட்டாக் செய்வதாக உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதுதான் மாஸ்

அதாவது திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சில் பேசிய தனுஷ், நாம் குழந்தையாக இருக்கும் போது நம்மை வளர்க்கும அப்பா அம்மா அவங்களுக்கு வயசான பிறகு குழந்தையா மாறிடுறாங்க. அவர்களை நாம் குழந்தையாக நினைத்து நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் மாஸ் என கூறியுள்ளார். நடிகர் தனுஷின் இந்த பேச்சுதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் முறிவுக்கு பிறகு காணாமல் போன நடிகை!

மறைமுகமாக..

நடிகர் விஜய் அவரது பெற்றோரை கண்டுகொள்ளாமல் விட்டதைதான் தனுஷ் இப்படி மறைமுகமாக சாடியுள்ளார் என்கின்றனர் வலைதளவாசிகள். சமீபத்தில் தனுஷின் அப்பாவான இயக்குநர் கஸ்தூரி ராஜா தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை குடும்பத்தினர் திருவிழா போல் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara:கைகளை கோர்த்தப்படி கடற்கரையில்.. விரைவில் நயன் விக்கி திருமணம்.. கலக்கல் ப்ரமோ!

அடுத்த செய்தி

டிரெண்டிங்