ஆப்நகரம்

தனுஷ் சிட்டி ரோபோ போன்றவர்.. ஜகமே தந்திரம் பட நடிகை

தனுஷ் சிட்டி ரோபோ போன்றவர் என நடிகை சஞ்சனா நடராஜன் கூறி இருக்கிறார்.

Samayam Tamil 4 Aug 2020, 7:16 pm
நடிகை சஞ்சனா நடராஜன் கடந்த 6 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறார். ஆனால் அவர் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் இருந்து நடிகையாக அறிமுகமான அவர் இவ்வளவு குறைந்த படங்களில் மெதுவாக நடித்து வருவது பற்றி எந்த வருத்தமும் இல்லை என பேசி இருக்கிறார்.
Samayam Tamil Dhanush


என்னுடைய பயணம் மதிப்புமிக்க ஒன்றாகவே எனக்கு உணர்கிறது. நான் வேறு ஒரு வழியை தேர்ந்தெடுத்து இருந்தால் தற்போது கார்த்திக் சுப்புராஜ் சார் மற்றும் தனுஷ் சார் உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்காது என சஞ்சனா குறிப்பிட்டுள்ளார். தனுஷ் மற்றும் கார்த்திக் ராஜ் இணையும் ஜகமே தந்திரம் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரகிட ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகி மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது. அந்த பாடல் வீடியோவில் சஞ்சனா நடராஜனும் இடம் பெற்றிருந்தார்.

இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்தது பற்றி பேசிய அவர், நான் இதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் அலுவலகத்திற்கு 2 படங்களுக்காக சென்றிருக்கிறேன், ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு ஒரு வெப் சீரிஸில் நடிக்க என்னை அவர் ஒப்பந்தம் செய்தார். அதில் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த போது ஜகமே தந்திரம் படத்திற்காக ஒரு ரோலுக்காக நடிகையை தேடி வருவதாக தெரிந்து கொண்டேன். என்னுடன் பணியாற்றி குழு தான் என்னுடைய பெயரை பரிந்துரைத்திருக்கிறது. நானும் என்னுடைய புகைப்படங்களை அனுப்பி இருந்தேன்.

நான் எப்போதும் வியப்பான ரோல்களில் நடிக்கவே விரும்புகிறேன். என்னுடைய தேவை அங்கு இருக்க வேண்டும் என நான் நினைப்பேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது. கிராமத்து பின்னணி கொண்ட ஒரு பெண்ணாக நடிக்கிறேன். மேலும் இது கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் இணையும் படம். அதனால் என்னுடைய நினைவில் எப்போதும் இருக்கும் படமாக இது இருக்கும் என நான் நடிக்க ஒப்புக் கொண்டேன் என அவர் கூறியிருக்கிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் பணியாற்றும் விதம் பற்றி பேசிய சஞ்சனா "அவர் படம் இயக்கும் விதம் மிகவும் வித்தியாசமானது. அவர் நடிகர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கிறார் என்பது எனக்கு அதிகம் பிடிக்கிறது.நாம் நன்றாக நடித்தால் அதை அவர் பாராட்டுகிறார். அது நம்முடைய நம்பிக்கையை ஊக்குவிக்கும்" என சஞ்சனா குறிப்பிட்டிருக்கிறார்.

தனுஷ் உடன் நடித்த அனுபவம் பற்றி பேசிய அவர், தனுஷ் நடிப்பதை பார்த்தே பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என குறிப்பிட்டிருக்கிறார். "அது ஷூட்டிங்கில் என்னுடைய முதல் நாள். நாங்கள் ரகிட ரகிட ரகிட பாடலை ஷுட் செய்து கொண்டிருந்தோம். எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது. ஆனால் அவர் என்னை சகஜமாக இருக்க சொன்னார். அங்கேயே நாள் முழுவதும் வந்து இருந்தேன். அவர் நடிப்பதை மற்றும் நடனம் ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் டேக் அல்லது மூன்றாவது டேக் எதுவாக இருந்தாலும் அதே எனர்ஜியுடன் அவர் செய்கிறார். அவர் இப்படி தொடர்ந்து செய்வது வியப்பாக இருந்தது. அவர் ஒரு சிட்டி ரோபோ போன்றவர், தன்னுடைய கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்பவர். என்னுடைய முதல் பாடல் தனுஷ் சார் உடன் என்பது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. அந்த படத்தில் ஒரு சிறிய பகுதியாக என்னை கார்த்திக் சுப்புராஜ் சார் நடிக்க வைத்தது எனக்கு மிகப் பெரிய விஷயம்" என சஞ்சனா கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்