ஆப்நகரம்

''என் மகன்தான் என்பது தனுஷ் மனசாட்சிக்கு தெரியும்'' : மீனாட்சி உருக்கம்

''என் மகன்தான் என்பது அவரது மனசாட்சிக்கு தெரியும்'' என்று தனுஷை தனது மகன் என்று உரிமை கோரி இருந்த மீனாட்சி தெரிவித்தார்.

TOI Contributor 21 Apr 2017, 2:26 pm
''என் மகன்தான் என்பது அவரது மனசாட்சிக்கு தெரியும்'' என்று தனுஷை தனது மகன் என்று உரிமை கோரி இருந்த மீனாட்சி தெரிவித்தார்.
Samayam Tamil dhanush knows very well that he is my son meenatchi
''என் மகன்தான் என்பது தனுஷ் மனசாட்சிக்கு தெரியும்'' : மீனாட்சி உருக்கம்


மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தனுஷை தங்களது மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்புத் தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் அவர்களது கூறுவதில் உண்மை இல்லை என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தனுஷ் தரப்பில் மனு செய்யப்பட்டது. இதையடுத்து தனுஷின் பள்ளி சான்றிதழ்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தனுஷின் அங்க அடையாளங்கள் எடுக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்த வழக்கை இன்று உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இந்தத் தீர்ப்பையடுத்து நீதிமன்ற வளாகத்தில்செய்தியாளர்களுக்கு கதிரேசன், மீனாட்சி தம்பதியர் அளித்த பேட்டியில், ''என் மகன்தான் தனுஷ் என்பது அவரது மனசாட்சிக்குத் தெரியும். மனது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தீர்ப்பு இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை. பணம் ஜெயித்துவிட்டது. தனுஷ்தான் எங்கள் மகன் என்பதற்கான அங்க அடையாளங்களை சமர்ப்பித்து இருந்தோம். இந்த உண்மை தனுஷுக்கு தெரியும். தனுஷுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தோம். பிறப்புச் சான்றிதழ் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இறைவன் இருக்கிறார். நீதி ஒருநாள் வெல்லும். கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்வோம்'' என்று தெரிவித்தனர்.

Dhanush Knows very well that he is my son: Meenatchi

அடுத்த செய்தி

டிரெண்டிங்