ஆப்நகரம்

மீண்டும் படம் தயாரித்து இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ் தம்பதி!

ஐஸ்வர்யா தனுஷ் தம்பதியினர் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து இயக்கவுள்ளனர்.

Samayam Tamil 20 Mar 2018, 6:35 pm
ஐஸ்வர்யா தனுஷ் தம்பதியினர் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து இயக்கவுள்ளனர்.
Samayam Tamil aishwary-story_647_072515011311


நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ‘3‘ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாகவும், ஸ்ருதிஹாசன் ஹீரோயினியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஓரளவு வெற்றிப்பெற்றது. இதையடுத்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா தனுஷ். து சுமாரான வெற்றியைப் பெற்றது.

அடுத்ததாக சினிமா சண்டைக்கலைஞர்களுக்காக ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக அறிவித்தார்.

ஆனால் அந்த அறிவிப்பு அப்படியே முடங்கிவிட்டது. தற்போது பேய் படம் ஒன்றை இயக்கவுள்ளாராம் ஐஸ்வர்யா தனுஷ். இந்தப் படத்தை கணவர் தனுஷ் தயாரிக்கவுள்ளார்.
தற்போது இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும் இந்த படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Aishwarya Dhanush is all set to direct her film which would be a Horror Movie with multi shaded elements with Dhanush, who takes care of production.

அடுத்த செய்தி

டிரெண்டிங்