ஆப்நகரம்

கோமாளி பட இயக்குனருடன் கூட்டணி சேரும் தனுஷ்?

கைவசம் நான்கு படங்கள் வைத்திருக்கும் தனுஷ் அடுத்து கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் கூட்டணி சேர்கிறார் என தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 21 Aug 2020, 3:53 pm
து. ஜகமே தந்திரம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடி இருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் வெளியான ரகிட ரகிட பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது தான்.
Samayam Tamil Dhanush


இந்த படத்தினை தொடர்ந்து ஒரு பாலிவுட் படம் உட்பட தனுஷ் 44 வரை தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் தற்போது கோமாளி பட புகழ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் கூட்டணி சேர்கிறார் என தகவல் பரவி வருகிறது.

கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து இருந்தார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதில் 16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து மீண்டு வரும் நபராக ஜெயம் ரவி நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தை அறிவிக்காமல் இருக்கிறார். அதனால் அது பற்றி ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அது பற்றி தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் தான் தற்போது அவர் தனுஷ் உடன் இணைவதாக செய்தி வெளியாகி உள்ளது.

சமீபத்தில் கோமாளி படம் வந்து ஒரு வருடம் ஆவதை பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார்கள். படக்குழுவினரும் அதில் பணியாற்றிய அனுபவம் பற்றி பதிவிட்டு இருந்தார்கள். அந்த படத்தை பார்த்து வியந்த நடிகர் தனுஷ் பிரதீப் ரங்கநாதனை அழைத்து தனக்கு தகுந்த கதை எதாவது இருக்கிறதா என கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் ஒரு வரி கதை ஒன்றை கூற, அது தனுஷுக்கு அதிகம் பிடித்துவிட்டதாம். அதனை டெவலப் செய்து கொண்டு வரும் படி தனுஷ் பிரதீப் ரங்கநாதனிடம் கூறி இருக்கிறார். அதனால் அவர்கள் விரைவில் கூட்டணி சேர்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அவர்கள் இணைவது பற்றி அதிகாரபூர்வமாக உறுதியான செய்தி எதுவும் வரவில்லை. அதனால் அவர்கள் இணைவர்களா என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

தனுஷின் ஜகமே தந்திரம் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சூழ்நிலையில் அதன் ரிலீஸ் தேதி மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு தான் உறுதியாகும் என தெரிகிறது. அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அந்த படமும் இறுதி கட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதனைத் தொடர்ந்து, தனுஷின் 42வது படமாக பாலிவுட்டில் அத்ராங்கி ரே என்ற படத்தில் தனுஷ் நடிக்கிறார். அந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் வாரணாசியில் நடைப்பெற்ற நிலையில் கொரோனா காரணமாக அடுத்த கட்ட ஷூட்டிங் துவங்காமல் தாமதம் ஆகி வருகிறது. தனுஷுடன் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இரு க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்