ஆப்நகரம்

மனைவி, மகன்களுடன் பழனி முருகனை தரிசித்த தனுஷ்

தனுஷ் தனது மனைவி, மகன்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Samayam Tamil 30 Dec 2019, 10:42 am
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டி 40 படத்தில் நடித்து வந்தார் தனுஷ். அந்த படத்தின் சில முக்கிய காட்சிகள் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்துவிட்து.
Samayam Tamil dhanush


இதையடுத்து தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ரோப் காரில் தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. தனுஷ் பெரிய மீசையுடன் டி 40 லுக்கில் இருக்கிறாார்.


போதையில் தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கினேனா?: நடிகை விளக்கம்

கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

டி40 படப்பிடிப்பு முடிந்துவிட்டது. என் நடிப்பில் வேகமாக எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. கார்த்திக் சுப்புராஜுடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. இது ஸ்பெஷலான படமாக இருக்கப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.


அஜித்தின் வலிமையில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா நீக்கமா?: உண்மை இதோ

டி 40 படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. ஃபிளாஷ்பேக் காட்சிகள் தான் மதுரையில் படமாக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள பட்டாஸ் படம் வரும் ஜனவரி மாதம் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்