ஆப்நகரம்

அரசியலுக்கு வரும் ரஜினி; மௌனமாக கடந்து சென்ற தனுஷ்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் தனுஷ் கருத்து எதுவும் கூறாமல் மௌனமாக சென்றது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 18 Jan 2019, 12:31 pm
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் தனுஷ் கருத்து எதுவும் கூறாமல் மௌனமாக சென்றது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த தனுஷ்


நடிகர் தனுஷ் தனது மனைவியும் திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா உடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்திருந்தார். அவருடன் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி வந்தனா ஆகியோரும் வந்திருந்தனர்.

அங்கு நடைபெற்ற கல்யாண உற்சவ சேவை வழிபாட்டில் மனைவியுடன் நடிகர் தனுஷ் பங்கேற்றார். அதில் ஏழுமலையானை வழிபட்டார். பிறகு அவர் கோயில் வளாகத்திற்கு வந்தார்.

வழிபாடு முடிந்து வெளியே வந்த தனுஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் எதுவும் கூறாமல் அங்கியிருந்து புறப்பட்டுச் சென்றார். கடந்தாண்டு நடைபெற்ற ’காலா’ பட இசைவெளியீட்டின் போது தனுஷ், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாக ஆதரித்து மேடையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்