ஆப்நகரம்

பிரதமரின் அறிவிப்பை வரவேற்ற தனுஷ்!

பிரதமரின் 21 நாள் ஷட்டவுன் அறிவிப்பை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

Samayam Tamil 25 Mar 2020, 9:30 am
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று நள்ளிரவு முதல் அடுத்த 21 நாள்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது என அறிவித்து உத்தரவிட்டது. இதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், பாதுகாப்பாக குடும்பத்தினருடனேயே இருக்கவும் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், நடிகர் தனுஷும் இந்த அறிவிப்பை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil dhanush


தனுஷ் ட்விட்டரில் கூறியுள்ளதாவது,



பிரதமரின் 21 நாள் முழு அடைப்பை வரவேற்கிறேன். கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து, கொரோனா பரவலை தடுக்க முழுமையாக ஒத்துழைக்கவும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அத்தியாவசியமான பொருள்கள் கட்டாயம் கிடைக்கும் அரசு உறுதி கூறியுள்ளது. எனவே அனைவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போரிடுவோம் என கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் முழுமையாகி திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. ஹிந்தி படத்தின் ஷூட்டிங்கும் தடைபட்டிருக்கும் நிலையில், தனுஷ் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பதாகவும், மக்களும் பாதுகாப்பாக இருக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது.


சில தினங்களுக்கு முன்னரும் தனுஷ் வீடியோவில் தோன்றி, மக்களிடமும் ரசிகர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை இப்படி ஒரு சூழ்நிலை நமக்கு வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டோம். கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க தனிமைப்படுத்துதல் மிக அவசியம் என கூறியிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்