ஆப்நகரம்

வடசென்னை 3 நாளில் 30 கோடி வசூல்? அதிர வைக்கும் பாக்ஸ்ஆபிஸ்!

சென்னையில் பிரதான பகுதியான வடசென்னை கதை களமாக கொண்ட தனுஷின் வடசென்னை படத்தின் வசூல் சக்கை போடு போட்டு வருகிறது.

Samayam Tamil 20 Oct 2018, 12:17 pm
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம், பொல்லாதவன் வெற்றியை தொடர்ந்து 3வது முறையாக வடசென்னை படத்தில் இணைந்துள்ளனர். 3 பாகமாக வரவிருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வியாழக்கிழமை வெளியானது.
Samayam Tamil vada chennai


இந்த படத்தில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, இயக்குனர்கள் அமீர், சமுத்திரகனி, நடிகர்கள் கிஷோர், ராதாரவி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

படமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க, தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, வடசென்னை தமிழகத்தில் மட்டுமே 3 நாட்களில் ரூ 18 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது.

உலகம் முழுவதும் இப்படம் எப்படியும் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூலை தொட்டு இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும், வடசென்னை தான் தனுஷின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் ஓப்பனிங் வசூலை கொடுத்த படமாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்