ஆப்நகரம்

எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி படத்திற்கு பாகிஸ்தானில்தடையில்லை: சி.பி.எஃப்.சி. தலைவர்

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடையில்லை என்று சி.பி.எஃப்.சி தலைவர் தெரிவித்துள்ளார்

TOI Contributor 16 May 2022, 5:02 pm
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி, நாடு முழுவதும் நாளை வெளியாகிறது. இப்படம் பாகிஸ்தானில் வெளியாக தடையில்லை என்று மத்திய திரைப்பட சான்றிதழ் சபை தெரிவித்துள்ளது.
Samayam Tamil ms dhoni


பாகிஸ்தான் நாட்டின் சான்றிதழ் பெறுவதற்கு படத்தின் இயக்குனர் நீரஜ் பாண்டே இப்படத்தை அனுப்பவில்லை. இதன் காரணமாக இப்படம் பாகிஸ்தானில் வெளியிட தடைவிதிக்கப்பட்டதாகவும், புறக்கணிக்கப்பட்டதாகவும் பத்திரிக்கையில் செய்தி வெளிவந்து கொண்டு இருந்தது.

இது தொடர்பாக மத்திய திரைப்பட சான்றிதழ் சபையின் தலைவர் மொபாசிர் ஹாசன் கூறுகையில், ஒரு படம் சான்றிதழுக்கு அனுப்பப்படவில்லை என்று அந்தப் படத்தை எப்படி நாம் தடை செய்யமுடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படத்தின் விநியோகஸ்தர்கள் கூட படத்திற்கான சான்றிதழ் பெற அனுப்பவில்லை. மேலும், பாகிஸ்தான் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறைமையை மனதில் கொண்டு தான் படத்திற்கு சான்றிதழ் வழங்கி வருகிறோம்.

எங்களுக்குரிய விதிமுறைகளின் படி தான் ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். இந்தப் படம் தடை செய்யப்படுவதற்கு சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த உரி தாக்குதலும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்நிலையில், பாலிவுட் படங்களான பஞ்சோ மற்றும் பிங்க் ஆகிய படங்கள் பாகிஸ்தான் நாடில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்