ஆப்நகரம்

நாளை மறுநாள் மீண்டும் தொடங்குகிறது ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு!

விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது.

TNN 19 Jun 2017, 3:09 pm
விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது.
Samayam Tamil dhruva natchathiram shooting again begins day after tomorrow
நாளை மறுநாள் மீண்டும் தொடங்குகிறது ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு!


கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கௌதம் மேனன் தயாரித்து வரும் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

நடிகர் விக்ரம், விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்கெட்ச்‘ படத்திலும், மற்றும் கௌதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்‘ ஆகிய இரண்டிலுமே மாறி மாறி நடிக்க முடிவு செய்திருந்தார். ஆனால், கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பணப் பிரச்னையால் ‘துருவ நட்சத்திரம்‘ படத்தின் படப்பிடிப்பு இடையில் தடைப்பட்டது. இதனால் நடிகர் விக்ரம் ‘ஸ்கெட்ச்‘ படத்தில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பை தற்போது ஜூன் 21ம் தேதி முதல் ஸ்லோவேனியாவி-ல் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் ஸ்லோவேனியா செல்லவுள்ளனர். நடிகர் விக்ரம் ‘ஸ்கெட்ச்‘ மற்றும் ‘துருவ நட்சத்திரம்‘ ஆகிய படங்களை முடித்துவிட்டு, ஜூலையிலிருந்து ‘சாமி 2’வில் நடிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்