ஆப்நகரம்

திரும்பி வாண்ணா, நீ இல்லாமல் இருக்க முடியல: சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி வேதனை

அண்ணா நீ திரும்பி வந்துவிடு. நீ இல்லாமல் இருக்க முடியவில்லை என்று சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி த்ருவா சார்ஜா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Jun 2020, 12:22 pm
கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 39 வயதில் சிரஞ்சீவிக்கு இப்படி ஒரு மரணமா என்று திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என்று பலரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்கள்.
Samayam Tamil chiranjeevi sarja


சிரஞ்சீவியின் உடல் அவர் தம்பி த்ருவா சார்ஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்டது. முதலில் சிரஞ்சீவியின் உடலை அவரின் தாத்தா அருகில் புதைக்கவே நினைத்தார்கள். அதன் பிறகு பண்ணை வீட்டு தோட்டத்தில் புதைத்தால் அவர் எப்பொழுதும் தங்களுடன் இருப்பது போன்று இருக்கும் என்று அங்கு புதைத்துவிட்டார்கள்.

சிரஞ்சீவி இறப்பதற்கு முந்தைய நாள் தன் தம்பிகளுடன் சேர்ந்து சிறு வயதில் எடுத்த புகைப்படத்தையும், சமீபத்திய புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை த்ருவா சார்ஜா தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து கூறியிருப்பதாவது, நீ திரும்பி வந்துவிட வேண்டும். நீ இல்லாமல் வாழ முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
த்ருவா சார்ஜாவின் போஸ்ட்டை பார்த்த கன்னட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். சிரஞ்சீவி இறந்துவிட்டார் என்பதை எங்களாலேயே இன்னும் நம்ப முடியவில்லை. அப்படி இருக்கும்போது அவரின் தம்பியான உங்களுக்கு நிச்சயம் கஷ்டமாகத் தான் இருக்கும். நாம் என்ன தான் ஆசைப்பட்டாலும் சிரஞ்சீவி திரும்பி வரப் போவது இல்லை. அதனால் மனதை தேற்றிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று ரசிகர்கள் த்ருவா சார்ஜாவிடம் தெரிவித்துள்ளனர்.

சிரஞ்சீவிக்கு த்ருவா சார்ஜா சாப்பாடு ஊட்டிவிட்டபோது எடுத்த வீடியோவை ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் அதிக அளவில் ஷேர் செய்து அழுவது போன்ற ஸ்மைலியை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன அவசரம் என்று பிறக்கப் போகும் குழந்தையை கூட பார்க்காமல் சென்றுவிட்டீர்கள் சிரஞ்சீவி என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிரஞ்சீவியின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறார். தான் அப்பா ஆகப் போகும் சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருந்த சிரஞ்சீவி அந்த குட் நியூஸை சொல்வதற்குள் சென்றுவிட்டார்.

லாக்டவுனின்போது சிரஞ்சீவி ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தார். ஒர்க்அவுட் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினார். அவர் இப்படி மாரடைப்பால் இறப்பார் என்று நினைக்கவே இல்லை என அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரஞ்சீவி இறந்துவிட்டார் என்பதை இன்னும் ஏற்க முடியவில்லை என்று அவரின் உறவினர் ஒருவரும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜுன் சகோதரியின் மகன் ஆவார். இந்நிலையில் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் தங்கை மற்றும் சிரஞ்சீவியுடன் சேர்ந்து சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram Chiranjeevi ❤️ A post shared by Aishwarya Arjun (@aishwaryaarjun) on Jun 12, 2020 at 3:26am PDT
சிரஞ்சிவீயின் உடலை பார்த்து அர்ஜுன் அழுத புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கண்கலங்க வைத்தது. மேலும் மேக்னா ராஜ் தன் காதல் கணவர் மீது விழுந்து கதறி அழுத புகைப்படங்களை பார்த்தும் ரசிகர்கள் கண்ணீர் விட்டார்கள். 10 ஆண்டுகளாக காதலித்து திருமணமான 2 ஆண்டுகளில் கணவனை இழந்து நிற்கும் மேக்னா ராஜ் இந்த துயரத்தில் இருந்து எப்படித் தான் மீண்டு வரப் போகிறாரோ என்று ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்