ஆப்நகரம்

தொழிலதிபருடன் திவ்யா ஸ்பந்தனா ரகசிய திருமணமா?

கர்நாடகத்தைச் சார்ந்த நடிகையும் , அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா தொழிபதிருடன் காதல் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் பரவிய நிலையில் அவரது தயார் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 24 Aug 2019, 3:05 pm
கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடித்த "அபி" என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா. இவர் தமிழில் "குத்து" என்ற படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தமிழில் பொல்லாதவன், வாரணம் ஆயிரம், கிரி உள்பட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்திருந்தார் ரம்யா. கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரம்யா தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களிலும் நடித்து வருகின்றார். பிரபலமடைந்த பிறகு இவர் தன் பெயரை திவ்யா ஸ்பந்தனா என மாற்றிக் கொண்டார்.
Samayam Tamil 1566453570_ramya-raphael-wedding

திவ்யா ஸ்பந்தனா


திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.

வெற்றி தோல்விகளை பெரிதாக பொருட்படுத்தாத அவர் அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக செயல்பட்டு வந்தார். திவ்யா ஸ்பந்தனா சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக செய்து வந்தார்.

திவ்யா ஸ்பந்தனா

Also Read : தல60 யில் அருண் விஜய் இருக்கிறாரா? இல்லையா ?

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து திவ்யா ஸ்பந்தனா எங்கு சென்றார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியாமல் இருந்தன.
இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலுடன் நடிகை திவ்யா ஸ்பந்தனா காதல் ஏற்பட்டதென்றும். இவர்களது திருமணம் துபாயில் நடக்கக் போகிறதென்று நம்பத்தகுந்த தகவலகள் பரவின.

இந்த வதந்தியைத்தொடந்து திவ்யா ஸ்பந்தனா தாய் ரஞ்சிதா இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது, "தற்போது திவ்யா திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. திருமணம் குறித்து அவர் முடிவு செய்தால் அதுபற்றி வெளிப்படையாக கூறுவோம். அவருடைய திருமணத்தை மூடிமறைத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை. திவ்யா ஸ்பந்தனா திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். திவ்யா ஸ்பந்தனா அரசியலில் கவனம் செலுத்தியபோது, ரபேல் தனது தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் அவர்கள் அதிகமாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. மேலும் திவ்யா ஸ்பந்தனா இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வரவும் மனமில்லை. இதுபோன்ற காரணங்களினால் 2 பேரும் பரஸ்பரம் பேசி பிரிந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தற்போது வரை நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இருவரின் குடும்பத்தினரும், தற்போது தொடர்பில் தான் இருக்கிறோம்" என்று ரம்யாவின் தாயார் கூறியுள்ளார்.

திவ்யா ஸ்பந்தனா

Also Read : விஜய் டிவி மீது பக்ரீத் படத்த்யாரிப்பாளர் வழக்கு !!

திவ்யா ஸ்பந்தனா தன் மக்களுக்காக காதலை முறித்துக்கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்