ஆப்நகரம்

மாலத்தீவுகளில் ஓசியில் தேனிலவு கொண்டாடிய காஜல் அகர்வால்?

காஜல் அகர்வால் நயா பைசா செலவில்லாமல் மாலத்தீவுகளில் தேனிலவை கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Dec 2020, 9:32 am
காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாள் கணவருடன் புது வீட்டில் குடியேறினார் காஜல்.
Samayam Tamil kajal aggarwal


அதன் பிறகு அவர் கவுதமுடன் மாலத்தீவுகளுக்கு தேனிலவுக்கு சென்றார். தேனிலவுக்கு சென்றபோது தினமும் தன் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் காஜல். அதை பார்த்தவர்கள் இது ஏன் காஜல் தேனிலவை வைத்து விளம்பரம் தேடுகிறார் என்று விமர்சித்தனர். அவர் தேனிலவை வைத்து விளம்பரம் தேடவில்லையாம்.

அடேங்கப்பா, தேனிலவுக்கு மட்டும் காஜல் இவ்வளவு செலவு செய்தாரா?

மாறாக மாலத்தீவுகளுக்கு விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளாராம். தேனிலவுக்காக காஜல் அகர்வால் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் ஒரு பைசா செலவில்லாமல் தேனிலவை கொண்டாடியுள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

நீருக்கு அடியில் இருக்கும் தி முராகா ஹோட்டலில் தங்கியிருந்தார் காஜல். அந்த ஹோட்டலில் தங்க நாள் ஒன்றுக்கு ரூ. 38 லட்சம் செலவாகுமாம். அந்த ஹோட்டலில் தங்க காஜல் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாலத்தீவுகளை பிற நாடுகள், அதிலும் குறிப்பாக இந்தியாவில் சுற்றுலாத்தலமாக விளம்பரம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாம். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் அதிகம் ஃபாலோயர்ஸ் இருக்கும் திரையுலக பிரபலங்களை வரவழைத்து அவர்களுக்கு ராஜ மரியாதை அளித்துள்ளது மாலத்தீவுகள் அரசு.

இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தால் பிரபலங்களுக்கு தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் உணவு இலவசமாம். 5 மில்லியன் மற்றும் அதற்கும் மேல் ஃபாலோயர்கள் இருந்தால் 2 பேருக்கான ரூம், உணவு, நாடு திரும்பும் டிக்கெட் இலவசமாம்.

காஜல் அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அதனால் அவருக்கும், கவுதமுக்கும் தி முராகா ஹோட்டலில் ரூம், உணவு, பயண செலவு, காஜல் விரும்பிய உடைகள் என்று அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டதாம்.

பதிலுக்கு காஜல் தி முராகா மற்றும் பிற இடங்களில் எடுத்த புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாம். காஜல் பைசா செலவில்லாமல் தேனிலவு கொண்டாடியதாக மும்பை மீடியாக்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இதை காஜல் அகர்வால் உறுதி செய்யவில்லை.

தேனிலவில் இருந்து நாடு திரும்பிய காஜல் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அவரை விரைவில் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டீகே இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் காஜல்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்