ஆப்நகரம்

அந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா?: நடிகை விளக்கம்

நடிகர் பவன் கல்யாண் தனது முன்னாள் மனைவிக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 17 Feb 2020, 11:43 am
நடிகர் பவன் கல்யாண் தனது முன்னாள் மனைவிக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
Samayam Tamil did pawan kalyan gift rs 5 crore flat renu desai explains
அந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா?: நடிகை விளக்கம்


ரேணு தேசாய்

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி நடிகை ரேணு தேசாய். ரேணு மறுமணம் செய்து கொண்டு தனது மகள் ஆத்யா, மகன் அகிராவுடன் வசித்து வருகிறார். தன் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளை இரண்டாவது கணவர் தனது சொந்த பிள்ளைகளை போன்று பார்த்துக் கொள்வதாக ரேணு தெரிவித்தார். இந்நிலையில் பவன் கல்யாண் ரேணுவுக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியது. இதை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள்.

ரூ. 5 கோடி வீடு

பிரிந்து சென்ற மனைவிக்கு எதற்காக ரூ. 5 கோடிக்கு வீடு என்று சிலரும், ரேணு பாவம் என்று சிலரும் சமூக வலைதளத்தில் பேசிக் கொண்டார்கள். அதிலும் சிலர் ரேணுவுக்கே போன் செய்து என்னமா புது வீடு எல்லாம் கிடைத்திருக்கு போன்று என்று கேட்டுள்ளனர். இதையடுத்து இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ரேணு சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்து போஸ்ட் போட்டுள்ளார்.

என் பணம்

எனக்கு நிறைய போன் கால்கள் வந்து கொண்டே இருக்கின்றது. பவன் கல்யாண் எனக்கு வீடு வாங்கித் தரவில்லை. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தான் வீடு வாங்கியிருக்கிறேன். நான் விவாகரத்து பெற்றபோதே அவரிடம் இருந்து ஜீவனாம்சம் எதுவும் கேட்கவில்லை. ஏன் என் தந்தையிடம் கூட உதவி என்று கேட்கவில்லை. அதனால் உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ரேணு தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்

தற்போது பரவியுள்ள வதந்தி என்னை பெரிதும் வேதனைப்படுத்தியுள்ளது. இது என் சுயமரியாதைக்கு சவால் விடுவதாக உள்ளது. நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், சுயமரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறன் என்று ரேணு தெரிவித்துள்ளார். அவரின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். கண்டபடி பேசுபவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள், அதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்