ஆப்நகரம்

கார் விபத்தில் சிக்கிய ராணாவின் தம்பி அபிராம்?: அப்பா சுரேஷ் பாபு விளக்கம்

நடிகர் ராணாவின் தம்பி ஆபிராம் கார் விபத்தில் சிக்கினார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.

Samayam Tamil 13 Aug 2020, 5:07 pm
தெலுங்கு நடிகர் ராணா மற்றும் அவரது காதலி மிஹிகா பஜாஜ் திருமணம் கடந்த சனிக்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களது திருமண புகைப்படங்கள் தான் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Samayam Tamil Rana Daggubatis brother Abhiram


இந்நிலையில் இன்று ராணாவின் சகோதரர் அபிராம் ஒரு கார் விபத்தில் சிக்கினார் என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது கார் Panchavati Colony, Manikonda என்ற இடத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. எதிரில் வந்த மற்றொரு வாகனத்தின் மீது அபிராமின் கார் மோதியது. அதனால் இரண்டு கார்களும் அதிக சேதத்தை சந்தித்து இருக்கின்றன. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் மற்றும் ராணாவின் தம்பி அபிராம் இருவரும் தப்பியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டு இது தொடர்பான விசாரணையை போலீசார் செய்து வருகிறார்கள், அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவை இவர்கள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ராணா திருமணம் முடிந்த சில நாட்களில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது பற்றி ராணாவின் அப்பா சுரேஷ் பாபு விளக்கம் அளித்துள்ளார். இந்த செய்தி முற்றிலும் வதந்தி என அவர் கூறி இருக்கிறார். விபத்து நடந்ததாக காட்டப்படும் கார் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது அல்ல என அவர் தெரிவித்து இருக்கிறாராம். மேலும் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறாராம்.

ராணாவின் தம்பி ஆபிராம் இதற்கு முன்பு பல்வேறு மோசமான காரணங்களுக்காக சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். குறிப்பாக நடிகை ஸ்ரீரெட்டி உடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில் விரைவில் அவர் சினிமாவில் ஹீரோவாகவும் நடிக்க உள்ளார் என்கிற செய்தியும் இதற்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த படத்தினை அவரது அப்பா தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தான் தயாரிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இருப்பினும் அந்த படத்தினை இயக்கப்போவது யார் என்பது பற்றிய அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.

மறுபுறம் ராணா தற்போது கைவசம் இரண்டு படங்களை வைத்து இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் Haathi Mere Saathi என்ற படத்தில் அவர் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அந்த படம் தமிழில் காதன் என்ற பெயரில் வெளிவரவுள்ளது. அந்த படத்தில் விஷ்ணு விஷால் ஒரு முக்கிய ரோலில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் இந்த படம் ஆரண்யா என்ற பெயரில் வெளிவர உள்ளது.

மேலும் தற்போது திருமணம் முடித்திருக்கும் ராணாவுக்கு பிரபலங்கல் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் திருமண விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதால் ராணா - மிஹிகா ஜோடிக்கு அவர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்