ஆப்நகரம்

Vanitha பொடவய மாத்துற மாதிரி புருஷன மாத்துறா வனிதான்னு சொன்னாரா ஸ்ரீதேவி?

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட வேகத்தில் பிரிந்தது குறித்து அவரின் தங்கை ஸ்ரீதேவி கூறியதாக ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

Samayam Tamil 16 Nov 2020, 6:52 pm
வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து லாக்டவுன் நேரத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இது வனிதாவின் 3வது திருமணம் ஆகும். முதல் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிய தான் காரணம் இல்லை என்றார் வனிதா. இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும்போது வனிதா மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதை பார்த்தவர்கள் அவரை கிண்டல் செய்தார்கள்.
Samayam Tamil vanitha vijayakumar


தன்னை கிண்டல் செய்தவர்களை சமூக வலைதளங்களில் விளாசினார் வனிதா. இந்நிலையில் திருமணமான வேகத்தில் வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள். பீட்டர் பால் எந்நேரமும் மது அருந்திக் கொண்டிருக்கிறாராம். இதையடுத்தே இனி அவருடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று வனிதா தெரிவித்தார்.

வனிதாவுக்கும் அவரின் அப்பா மற்றும் உடன் பிறந்தவர்களுக்கும் இடையே பிரச்சனை. அதனால் அவர்கள் வனிதாவை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இந்நிலையில் வனிதா பற்றி அவரின் தங்கையும், நடிகையுமான ஸ்ரீதேவி விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளாராம்.

புடவையை மாற்றுவது போன்று புருஷனை மாத்துகிறாள். இரண்டு மகள்களுக்காகவாவது வனிதா இனி நல்லபடியாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி கூறியுள்ளாராம். வனிதாவை அவர் குடும்பத்தார் யாருமே கண்டு கொள்வது இல்லை. இந்நிலையில் ஸ்ரீதேவி தன் அக்காவை பற்றி இப்படி பேச வாய்ப்பே இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

பீட்டர் பால் பிரிந்து சென்ற பிறகு வனிதா டிவி நிகழ்ச்சிகள், தன்னுடைய யூடியூப் சேனலில் கவனம் செலுத்தி வருகிறார். இதயம் கனக்கிறது, சிரிக்கக் கூட முடியவில்லை என்று தெரிவித்தார் வனிதா. மகள்களுக்காக தைரியமாக இருக்கப் போவதாக கூறினார். அவர் தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்தி வருவதை பார்த்த ஆதரவாளர்கள் பாராட்டியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்த வனிதா அந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

Losliya லோஸ்லியாவிடம் பேசினேன், நொறுங்கிட்டார், அழுகிறார்: வனிதா

இந்நிலையில் பீட்டர் பாலுடனான பிரேக்கப்புக்கு பிறகு பண்டிகைகள் மிகவும் வேதனை அளிப்பதாக இருப்பதாக வனிதா இன்று ட்வீட் செய்துள்ளார். மேலும் தந்தையை இழந்து வாடும் லோஸ்லியாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் வனிதா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்