ஆப்நகரம்

Nayanthara: எங்களை கல்யாணத்துக்கு கூப்பிடல... கண்ணீர்விட்ட விக்னேஷ் சிவனின் அம்மா!

திருமணத்திற்கு தங்களை அழைக்கவில்லை என விக்னேஷ் சிவனின் அம்மா கண்ணீர் விட்டுள்ளார்.

Samayam Tamil 10 Jun 2022, 9:53 am
திருமணத்திற்கு தங்களை அழைக்கவில்லை என விக்னேஷ் சிவனின் அம்மா கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
Samayam Tamil didnt invite us for marriage vignesh shivan paternal aunty cries
Nayanthara: எங்களை கல்யாணத்துக்கு கூப்பிடல... கண்ணீர்விட்ட விக்னேஷ் சிவனின் அம்மா!



நேற்று திருமணம்

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Nayanthara: Mam to Wife... நயனை விதவிதமாக வர்ணித்து உருகிய விக்கி!

பிரபலங்கள் பங்கேற்பு

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற அவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி, சரத்குமார், ராதிகா சரத்குமார், ஷாலினி என பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

Nayanthara:விக்கி கட்டிய தாலி... கையில் எடுத்து பூரிப்புடன் பார்க்கும் நயன்... புதிய போட்டோஸ்!

பெரியம்மா கண்ணீர்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண போட்டோக்கள் நேற்றே வெளியாகி வைரலானது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது திருமணத்திற்கு தங்களை அழைக்கவில்லை என அவரது பெரியம்மா வருத்தம் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் அப்பாவின் அண்ணன் மனைவியான அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Nayanthara:சீக்கிரம் 11 ஆகுங்க... நம்பரில் விளையாடிய விக்கிக்கு ஆர்டர் போடும் ஃபேன்ஸ்!

சிறு வயதில்..

சென்னையில் வசித்து வரும் இவர்கள், விக்னேஷ் சிவன் சிறு வயதாக இருக்கும் போது விடுமுறை என்றால் தங்களின் வீட்டிற்குதான் அவரது அப்பா அழைத்து வருவார் என கூறியுள்ளார். சில நாட்கள் தங்களின் வீட்டில்தான் அவர்கள் தங்கியிருந்து செல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

VJ Chithra: அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்காக விஜே சித்ராவை மொய்த்த கூட்டம்... வெடித்த பிரச்சனை... வெளியான பகீர் தகவல்!

அழைக்கவில்லை...

இந்நிலையில் திருமணத்திற்கு விக்னேஷ் சிவன் தங்களை அழைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை என கண்ணீர் விட்டுள்ளார். மேலும் திருமணத்திற்கு முன்பாக குல தெய்வ கோவிலில் பொங்கல் வைக்க வேண்டும் என்று தான்தான் கூறியதாகவும் ஆனால் அதற்கும் தன்னை அழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Nayanthara: பலாப்பழ பிரியாணி.. காய் பொரிச்சது... வத்தல் வடம்... நயன் கல்யாண மெனு இதாங்க!

விருந்துக்கு வந்தால்...

அப்போதே அவர்கள் மீது வருத்தம் இருந்தது என்றும், திருமணத்திற்காவது அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ள விக்னேஷ் சிவனின் பெரியம்மா, விக்னேஷ் சிவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என கூறியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களின் வீட்டிற்கு விருந்துக்கு வந்தால் மகிழ்ச்சி தான் என்றும் அவரது பெரியம்மா கூறியுள்ளார்.

Nayanthara: வாவ்... கல்யாணத்துக்காக நாத்தனாருக்கு அள்ளிக்கொடுத்த நயன்தாரா... என்ன பரிசுன்னு பாருங்க!

அடுத்த செய்தி

டிரெண்டிங்